சனி, பிப்ரவரி 25

அறிவியல் ஆனந்தம் 5

கரையான் புற்று எப்படி வலுவாக உள்ளது?
கரையான்கள் கட்டும் கூட்டுக்கு டெர்மிட்டோரியம் அல்லது புற்றுக்கள் என்று பெயர். இதனைக் கட்ட மண், மரத்துண்டு மற்றும் கரையான்களின் கழிவுகள் பயன்படுத்தப்படுகின்றன. இது கரையான்களின் உமிழ்நீருடன் கலந்து கெட்டிப்படுத்தப்பட்டு அரண்மனை போன்ற அமைப்புடன் கட்டப்படுகின்றன. இதில் பாலங்கள், கால்வாய்கள், உணவுகிடங்குகள், ராணியின் அறை என பல அடுக்குகளாக கூம்பு வடிவில் கட்டப்படுகின்றன. இவை சிமெண்டால் கட்டியது போன்று மிக வலிமையாய் இருக்கும்.