சனி, ஆகஸ்ட் 31

மனசை அரித்தவள்

மனசு

ஒளிவெள்ளத்தில்
நிழல் வராது
இருப்பினும்
வருகின்ற திசையினை
நோக்கி தேடுகிறேன்
நேரம் செல்லச் செல்ல
இருட்டத்தொடங்கியது
அறிவு உரைத்தது
இருட்டிலும் நிழல்
வராது என்று..!

மனசு எதையாவது தேடிக்கொண்டே இருக்கிறது. தேடல் நல்லதுதான். அலைபாயும் கடலையும் மனசையும் கட்டுக்குள் கொண்டு வருவது இயலாத.. இயலவே இயலாத காரியம். இருந்தும் இருட்டில் திசையே அறியாத அவள் வரும் திசையினை நோக்கித் தேடுகிறது மனசு.

திங்கள், ஆகஸ்ட் 19

TET ANSWER KEY MATHS AND SCIENCE

 18.08.13 அன்று நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு கணிதம் மற்றும் அறிவியல் பாடத்திற்கான  ( TET TENTATIVE ANSWER KEY PAPER II ) உத்தேச பதில்கள் புதிய விடியலில் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கான இணைப்பு பெற இங்கு கிளிக் செய்யவும்.  SUCCESS ACADEMY யின் பதில்கள் பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.


Rectified Tentative Answer Key இங்கு கிளிக் செய்து பெறவும்.

ஞாயிறு, ஆகஸ்ட் 18

TET ANSWER KEY SOCIAL SCIENCE

       18.08.13 அன்று நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு சமூக அறிவியல் பாடத்திற்கான  ( TET TENTATIVE ANSWER KEY PAPER II ) உத்தேச பதில்கள் புதிய விடியலில் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கான இணைப்பு பெற இங்கு கிளிக் செய்யவும். SUCCESS ACADEMY ன் பதில்கள் பெறுவதற்கு இங்கு கிளிக் செய்யுங்கள்.

சனி, ஆகஸ்ட் 17

ஆசிரியர் தகுதித்தேர்வு பதில்கள்

                       17.08.2013 அன்று நடந்த முதல் தாள் (PAPER I) இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வின் உத்தேசமான பதில்கள்  "TET TENTATIVE ANSWER KEY”  கல்விச்சோலையில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு    பெற இங்கு கிளிக் செய்யவும் மற்றும் புதிய விடியல் பயிற்சி மையத்தாரின் பதில்கள் பெற இங்கு கிளிக் செய்யவும். அறிவுக்கடல் பதிப்பகத்தின் உத்தேச பதில்கள் பெற இங்கும் கிளிக் செய்யுங்கள். விடியல் பயிற்சி மையத்தாரின் http://vidiyalarni.blogspot.in/  உத்தேச பதில்கள் பெற இங்கு கிளிக்கவும். ஒவ்வொரு தலைப்பு வாரியாக RaniTETPark என்ற தளத்திலும் உள்ளது. அதனை டவுன்லோட் செய்து பார்க்கவும். அதற்கான இணைப்பு பெற இங்கு கிளிக் செய்யவும்.  

குரங்கு கூட்டம்

ஆடை அழகுதான்
மனம்தான் அழுக்கு
ஆடை அழுக்குதான்
மனம் வெகு அழகு

            மனிதர்கள் உடலை அழகுபடுத்தும் விதத்தில் பாதிகூட மனம் அழகுபடுத்துவதற்கு நேரம் செலவிடுவதில்லை. இப்போதெல்லாம் விலை உயர்ந்த பொருட்களுக்குத் தரும் மதிப்பில் பாதிகூட மனிதர்களுக்கு தருவதில்லை.



வளைகின்றது
நெழிகின்றது
சுழன்றடிக்கிறது
புரட்டிப்போடுகிறது
குமுறுகிறது
குதூகலிக்கிறது
சொரணையின்றியிருக்கிறது
கவலைகொள்கிறது
ஏதோவொரு தருணத்தில் மனம்..!

வெள்ளி, ஆகஸ்ட் 16

இலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் பகுதி 5

          நிறைய தமிழ் புத்தகங்கள், நாவல்கள், சிறுகதைகள், இலக்கியங்கள் போன்றவை    இணையத்தில்    காணக்கிடைக்கின்றன.    அவற்றின் இணைப்புகளை    மட்டும் தொகுத்து ஏற்கனவே நான்கு பகுதிகளில் வழங்கியுள்ளோம். இவை இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் புத்தகங்களின் இணைப்பு மட்டுமே.  என்னால் பதிவேற்றம் செய்யப்பட்டவை அல்ல.  முந்தைய  பகுதிகள்  செல்ல  கீழே  உள்ள  இணைப்பினை  கிளிக் செய்யவும்.

வியாழன், ஆகஸ்ட் 15

வெறுப்பாய்...

      என்னையே எனக்கு பிடிக்காதபோது மற்றவர்களுக்கு என்னைப் பிடிக்காமல் போனதில் எனக்கு ஆச்சரியமொன்றுமில்லை. உலகத்தில் வெறுப்பு என்ற ஒன்று நிரந்தரமாகத் தங்கிப்போனது. தமக்கு பிடிக்காத ஏதோ ஒன்றின்மீது வெறுப்பு வருவது இயற்கைதான். அது உயிர்களிடத்தில் வரும்போதுதான் அதுவும் மனது என்ற ஒன்றைக்கொண்டிருக்கும் மனிதர்களிடத்தில் வரும்போதுதான் வெறுப்பின்மீது வெறுப்பு வருகிறது.


மனதினால்
நினைக்கும் ஆற்றல்
பெற்றதால்
மனிதனாகிறான்..!