புதன், டிசம்பர் 24

உன்னை நினைத்து


உன்னை நினைத்து
எழுதுவதெல்லாம்
கவிதையாகிறது
உன்னையே
எழுதுவதுதான்
காவியமாகிறது..!


உன்னை அணைக்க
நினைக்கும்போதெல்லாம்
என்னை பார்த்து
நிலா சிரிக்கிறது.


மரபுக்கவிதையா
வெண்பாவா
எனக்குத்தெரியாது
ஆனால்
நிச்சயம் நீ
புதுக்கவிதைதான்.


என் இதயம்
செய்யும் துரோகம்
என்னிடம் இருந்துகொண்டே
உன்னை நினைப்பது!


நீ விலக விலக
இறுகுகிறது
அன்பு!