வியாழன், ஏப்ரல் 12

மாணவர்களை மனிதனாக்கும் கல்வி

        இன்றைய கல்வி முறை சரியா? தவறா? என்ற விவாதத்திற்குள் நான் வரவில்லை. ஆனால் இன்றைய கல்வி முறையில் இன்னும் நிறைய விசயங்களைச் சேர்த்திருந்தால் சிறப்பாக இருக்கும். வெறும் தமிழும், அறிவியலும், கணிதமும் ஒருநாளும் மாணவனை மனிதனாக மாற்றாது. செத்துப்போனவர்களைப் பற்றியே படிப்பதால் அவனுக்குள் மனமாற்றம் நிச்சயம் வரப்போவதில்லை. பழமையோடு புதுமையையும் கொஞ்சம் கற்றுக்கொடுத்தால் நன்றாக இருக்கும். மாணவர்களின் விருப்பங்கள் இங்கு மதிக்கப்படுவதில்லை. வரும் அதிகாரிகளும் வெறும் புள்ளிவிபரங்களை மட்டுமே பார்த்து திருப்திப்பட்டுக்கொள்கிறார்கள் அல்லது திட்டிவிட்டுச் செல்கிறார்கள். பாடத்தினைத் தவிர்த்து மாணவன் பெரும்பாலும் வேறு எதனையும் கற்றுக்கொள்வதில்லை.