சனி, செப்டம்பர் 8

கழுதையும் குருவியும்

                             ஆளுக்கொரு உரிமை என நாடுகளுக்கிடையேயும் உலக வர்த்தக அமைப்புடனும்  போடப்படும் ஒப்பந்தத்தினை கேலி செய்யும் வகையிலும் அது ஒரு ஏமாற்று வேலை என்பதையும் சொல்லும் விதமாக ஒரு கதை. ”முதலாவது”,  “இரண்டாவது” என்று சொல்லப்படுவதன் அர்த்தமின்மையையும் இந்தக் கதையின்மூலம் விளங்கிக் கொள்ளலாம். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் அறிவொளி கற்போர் கூறிய கதையின் தொகுப்பிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. இது ஒரு எளிய கதைதான் என்றாலும் பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது.

             
     கழுதையும் குருவியும் நண்பர்களாம். இரண்டும் சேர்ந்து விவசாயம் செய்ய ஒப்பந்தம் செய்துகொண்டன. ஒப்பந்தத்தில் ஆளுக்கு ஒரு உரிமை தரப்பட்டது.