சனி, டிசம்பர் 22

ஓலைக்குடிசை

இரவு வானின் அழகை
எங்கள் ரசிக்க முடியாத
ஓட்டை குடிசையின் 
வழியே ரசிக்கலாம்
ஒரு மழைக்காலத்தில்
கிழிந்த பாய்
பழைய துணி
நைந்துபோன சாக்கு
இத்துப்போன கிடுகு
வீணாய்போன பாலித்தீன்
இவற்றில் ஏதோ
ஒன்றை வைத்து
தற்காலிகமாய்
மழை நிற்க வைப்போம்
அடுத்த மழைக்குள்
ஓட்டையை சரி செய்யனும்
இயலாமையை வெளிப்படுத்துவார்
தந்தை
எனக்கும்
ஓலையில் செய்த
கால்சட்டை எங்கேனும்
கிடைக்குமா?
இவற்றில் ஏதேனும்
ஒன்றை வைத்து மறைத்து
நானும் மானம் காத்துக்
கொள்வேன்!




வெள்ளி, டிசம்பர் 21

வழிப்போக்கனின் கதை

திசை தெரியாத பறவை
ஒன்று பறந்து கொண்டிருந்தது
தன் சிறகுகளை வேகமாக
உதிர்த்தபடி....




                    எங்கே போய் சேரவேண்டும் என்பது தெரியாமலேயே பயணம் செய்தான் வழிப்போக்கன் ஒருவன். நீண்ட தனிமைப் பயணம் அது. வெற்று மனிதனாகத்தான் சென்றான். வழியில் பூஞ்சோலைகள், அருவிகள், மரங்கள், பறவைகள் என வரிசையாக ரசித்துக்கோண்டே சென்றான். இடையிடையே பழங்களை உண்டு பசியாறினான். 

         ஒரு பனிக்கால காலைப்பொழுதில் இன்னுமொரு வழிப்போக்கனைக் கண்டான். தனிமையில் இருந்த அவனுக்கு அது நிச்சயமாக மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்தது. இதுவரை தேக்கி வைத்திருந்த பேச்சினை எல்லாம் அவனிடம் பேசினான். அவனும் பொறுமையாகக் கேட்டான். அவன் திறமைசாலி போலும். நிறைய நாட்டுப்புற பாடல்கள் பாடினான். உண்பதற்கு சில வித்தியாசமான உணவுகளையும் கொடுத்தான். அவனுடைய காதல் கதைகளைக் கூறினான். இடையிடையே அழகான கவியும் படைத்தான்.

”என் விழிகளின் மூலம் 
நீ கனவு கண்டுபார்
என் அன்பு உனக்கு விளங்கும்”

       அவன் பேச்சினை ரசித்தான். இதுவரை அதிகமாக யாருடைய பேச்சினையும் கேட்டறியாத இவனுக்கு அவன் பேச்சு பிடித்திருந்தது. இரவும் பகலும் அவன் பேச்சினைக் கேட்டான். சந்தோசத்தில் இரவினில் புரண்டான். அவன் அழுக்கினை பவுர்ணமி நிலா வந்து கழுவியது. அவன்மீது அன்பு அதிகமானது. சண்டைகள் போட்டனர், சந்தோசங்களைப் பகிர்ந்தனர், இவன்மீது உரிமை எடுத்து திட்டினான். அது இவனுக்கு புதிதாக இருந்தது. அனைத்தையும் ரசித்தனர். இருவரிடமும் பரஸ்பரம் அன்பு அதிகரித்தது. திகட்டவில்லை இந்த வழிப்போக்கனுக்கு. 

”ஊமை பேசும் மொழிகளை
புரிந்து கொள்ளும் எனக்கு
நீ பேசும் மொழி 
புரிந்து கொள்ள இயலவில்லை”

       திடீரென அவன் செல்லுமிடத்திற்கான வழி ஒரு இடத்தில் பிரிந்தது.  அவனை அழைத்துச்செல்ல நண்பர்கள் நிறைய காத்திருந்தனர். தனிமையில் செல்லும் இவனுக்கு அது ஆச்சரியமாக இருந்தது. அனைவரும் சற்று நேரம் அமர்ந்து பேசினார்கள். அவன் நண்பர்களுடன் செல்லும் நேரம் நெருங்கியதால் இவனைத் தவிர்த்தான். 

       வெற்று மனிதனாக வந்த இந்த வழிப்போக்கன் திரும்பவும் வெற்று மனிதனாகவே புறப்பட்டு சென்றான். ஈசல் மடியுற மாதிரி சடக்குனு மடிஞ்சுட்டா அவனின் நினைவுகளை அவமதித்தது போலாகிவிடும். எனவே இனிமையான நினைவுகளுடன் திசை தெரியாத அவன் பயணமும் தொடர்ந்தது. கற்களும், முற்களும், கொடூர விலங்குகளும் இருக்கும் பாதையைத் தேர்ந்தெடுத்து நடந்தான். இனி யாருமற்ற தனிமைப்பாதையிலே சந்தோசமாகவே சென்றான். அவனின் நினைவுகளும் இவனுடன் பயணித்தன.

புதன், நவம்பர் 21

தா...வரம்


நான் இல்லையென்றால் பூமியில்
காற்றும் இல்லை
எனக்கும் கர்வம்தான்
நான் இல்லையென்றால்
பெட்ரோல்... நிலக்கரி
எதுவுமில்லை
கர்வம்தான்

நான் இல்லையென்றால் எந்த 
உயிரினமும் உலகிலில்லை
கர்வம்தான்
நான் இல்லையென்றால் பூமியின்
வெப்பம்கூடி சுடுகாடாயிருக்கும்
கர்வம்தான்
மனிதனின் மானமும் காப்பேன்
உயிரையும் காப்பேன்
கர்வம்தான்
உலகில் உயரமானவனும்
நான்தான்
கர்வம்தான்


பரந்துவிரிந்து சிறகடிக்கும்
என்னை மனிதன் ஒருவன் 
ஜட்டிக்குள்ள
குட்டிபோட வைத்தான்
அவனுக்கு இது கர்வம்தான்...!!!
எனக்கும்  தா... ஒரு வரம்!!
நானும் அவனை வளர்க்கவேண்டும்
என் ஜட்டிக்குள்...!!!



வியாழன், நவம்பர் 8

ஒரு டவுட்!

வரவர நானும் அறிவாளியாகிக்கிட்டே இருக்கேன். ஒரு டவுட்டுனு  சொல்லிட்டு நிறைய கேட்டிருக்கேன்.

ஒருதலைக்காதல்
 இருவரும் காதலிச்சால்தானே அது காதல். அப்படித்தானே! அப்போ... ஒருதலைநினைப்பு!

சனி, நவம்பர் 3

படிப்பு

         படிப்பு என்றால் என்ன? மனிதனை உருவாக்குவதே படிப்பு. அப்போ! படிக்காதவனெல்லாம் மனிதனில்லையா? பக்குவப்பட்ட, அறிவுடைய, சிந்திக்கும் திறனுடைய ஒருவனை உருவாக்குவதே கல்வி. உலகைப்பற்றி அறியவும் பலதரப்பட்ட சம்பவங்களை தெரிந்து கொள்ளவும்தான் படிப்பு உதவும்.
          அந்த படிப்பை ஒருவன் வாழ்க்கையில் எப்படி பயன்படுத்துகிறனோ அவனே வெற்றியடைகிறான். என்னுடன் படித்தவர்களில் பல மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுத்தனர். அதில் இன்னும் சிலர் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைமையை அடைய முடியாமல் தவிக்கின்றனர். ஆனால் சராசரி மதிப்பெண் எடுத்த பலர் வாழ்க்கையில் ஒரு நல்ல அல்லது வெற்றிகரமான நிலைமையை அடைந்துள்ளனர். ஏனெனில் நன்றாக படிக்கும் பலர் புத்தக அறிவு மட்டுமே போதும் என்றிருந்துவிட்டனர். அதற்குமேல் வாழ்க்கைக்கல்வி என்ற ஒரு விசயம் இருப்பதை மறந்தும் விட்டனர்.

வெள்ளி, அக்டோபர் 26

காக்கா பிடித்தல்

                    சிறிய வயதில் காகம் வடையைக் தூக்கிக்கொண்டு போன கதையில்தான் முதன்முதலாக காகம் அறிமுகமானது. அதில் காகமானது மற்றவர்களை ஏமாற்றும் என்றே கற்பித்தார்கள். பின்பு ஒரு கதையில் புத்திசாலியாக சித்தரிக்கப்பட்டது. குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் ஒரு காகம் அலையும் எனவும் சிறிதளவு தண்ணீர் உள்ள ஒரு மண்பானையில் கல்லைத்தூக்கி போட்டு நீரை நிறையவைத்து தண்ணீர் குடித்துவிட்டு செல்லும். அப்போது முதல் காகத்தை நிறையவே நேசித்தேன். எங்கள் வீட்டு எதிரில் செல்லும் மின்கம்பியில் வரிசையாக காகம் அமர்ந்திருக்கும் அழகே தனிதான். ஆனால் இப்போது காகத்தை பார்ப்பதே அரிதாக உள்ளது. உண்மையிலேயே காகம் இனம் அழிந்துகொண்டு வருகிறதா எனத்தெரியவில்லை. வீட்டு மொட்டை மாடியில் வடாம் காயவைக்கும்போது எதுக்கு பயப்படுகிறார்களோ இல்லையோ காகத்திற்கு பயப்படுவார்கள். ஆனால் அந்த காகத்தினை கூப்பிட்டு விரதமிடும் நாளில் மட்டும் உணவும் வைப்பார்கள். (ஆனா வடாம் திங்கக்கூடாது.. என்ன ஞாயம் இது) சிலர் தினமும் உணவு வைப்பதை கண்டிருக்கிறேன். 

     

செவ்வாய், அக்டோபர் 23

நானோ

தனிமமாக இருக்கும் நம்மை
உன் தந்தை சேர்மமாக மாற்றுவாரா!

இது வேதியியல் படிக்கும் ஒரு மாணவரின் காதல் கவிதை. சரி தனிமம் என்றால் என்ன? சேர்மம் என்றால் என்ன?

தனிமம் : தனிமம் என்பது தனிப்பட்ட ஒரே வகை அணு. ஒவ்வொரு தனிமத்திற்கும் ஓர் அணு எண் உண்டு.  தங்கம், வெள்ளி, இரும்பு போன்றவை வெவ்வேறு தனிமங்கள் ஆகும். 2006 ஆம் ஆண்டு இறுதி வரையிலும் மொத்தம் 117 தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவற்றுள் அணுவெண் 1 கொண்ட ஹைட்ரஜன் முதலாக அணுவெண் 94 கொண்ட புளுட்டோன்யம் வரை உள்ள 94 தனிமங்களும் இயற்கையில் கிடைப்பன. இது, சாதாரண வேதியியல் நுட்பங்களைப் பயன்படுத்தி வேறு பதார்த்தங்களாகப் பிரிக்க அல்லது அவ்வாறு மாற்ற முடியாதவை ஆகும். இத் தனிமங்களின் இயல்பு கெடாமல் மேலும் பிரிக்கமுடியாத மிகச் சிறிய துகள் அணு எனப்படும். தனது எல்லா அணுக்களிலும் ஒரே அளவான புரோட்டான்களை (protons) கொண்ட பதார்த்த வகையே தனிமம் ஆகும். கால்சியம் என்ற தனிமம் அனைத்து உயிரிகளின், உடல் செயல்பாட்டுக்கும் கட்டாயம் தேவையாகும். கால்சியம் என்றால் என்ன தெரியுமா? அதுதான் சுண்ணாம்பு. லத்தீனில் கால்சிஸ் என்ற வார்த்தைக்கு சுண்ணாம்பு என்பதுதான் பொருள். ஓஸ்மியம் (osmium) அல்லது இருடியம் (iridium) தான் அடர்த்தி மிகுந்த தனிமம் ஆகும்.

செவ்வாய், அக்டோபர் 16

TET Answer Key Oct 2012

14.10.2012 அன்று ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) நடந்தது. இத்தேர்வில் சுமார் 6.50 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். இத்தேர்விற்கான முதல்தாள் (PAPER I) மற்றும் இரண்டாம் தாள் (PAPER II)  உத்தேச பதில்கள் (Tentative Answer Key October 2012)  சில பயிற்சி மையத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. அதன் இணைப்பு கீழே உள்ளது. மீண்டும் நினைவூட்டுகிறோம். இவை அனைத்துமே  உத்தேச பதில்கள் மட்டுமே. அதிகாரப்பூர்வ பதில் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


1. TET Paper I
2.TET Paper II

3. TET Paper II
4. TET Paper II
5. TET Paper I & TET Paper II

UPDATE :
ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அதிகாரப்பூர்வ பதில்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் இணைப்பு பெற இங்கே கிளிக் செய்யவும்.

திங்கள், அக்டோபர் 15

TET Answer key Oct 2012

14.10.2012 அன்று ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) நடந்தது. இத்தேர்வில் சுமார் 6.50 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். இத்தேர்விற்கான முதல்தாள் (PAPER I) உத்தேச பதில்கள் (Tentative Answer Key October 2012) வேலூர் பயிற்சி மையத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. அதன் இணைப்பு கீழே உள்ளது. 
1. TET PAPER I

வெள்ளி, செப்டம்பர் 28

ஆசிரியர் தகுதித்தேர்வு - புவியியல்


  1. புவியின் சுற்றளவு 40,067 கி.மீ
  2. சூரியன் ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம் 8.3 நிமிடங்கள்
  3. புவிக்கும் பிராக்சிமா செண்டாரிக்கும் உள்ள தூரம் 4.3 ஒளியாண்டு
  4. சூரியன் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலை 6000 டிகிரி செல்சியஸ்
  5. புவியின் மையப்பகுதியில் உள்ள வெப்பநிலை 5000 டிகிரி செல்சியஸ்
  6. சூரியனின் மையப்பகுதி வெப்பநிலை 15,000,000 டிகிரி செல்சியஸ்
  7. பனிப்பந்து என்றழைக்கப்படுவது புளூட்டோ
  8. ஆகாய கங்கை எனப்படுவது பால்வெளி அண்டம்
  9. சனிக்கோளின் துணைக்கோள்கள் எண்ணிக்கை 60
  10. சந்திரன் பூமிய சுற்றும் சராசரிவேகம் 9,84,401 கி.மீ

திங்கள், செப்டம்பர் 24

அந்தோ! ஆசிரியர்

      ”பள்ளிக்கூடம் என்பது நாகரீக உலகின் முன் அறிவிக்கப்படாத கொத்தடிமை முறை; குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் சமூகம் அங்கீகரித்த கொடிய வன்முறை” என்றார் ஜான் ஹோல்ட். 1972 ல் பள்ளி மாணவர் உரிமை கோரும் மாநாட்டில் நான்கு விசயங்களை மாணவர்களுக்கு அளிக்ககோரியது.

1. மாணவர்களை அடிப்பது, தண்டனைகள் உடல் ரீதியில் வழங்குவதை உடனே தடை செய்ய வேண்டும்.
2. உணவு இடைவேளையோடு, இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை குறைந்தபட்சம் பதினைந்து நிமிட ஆசுவாசப்படுத்தலை அமல் செய்யவேண்டும்.
3. இடைவேளையின் போது பள்ளியில் எங்கும் சுற்றித்திரியும் சுதந்திரம்.
4. உடனடியாக சீருடை திணிப்பை நிறுத்தி சீருடைகளை தேர்ந்தெடுக்கும் உரிமையை மாணவர்களுக்கு வழங்கவேண்டும்.

      மேலும் அவர் கூறுகையில் “பள்ளிக்கூடத்தில் ஒரே மாதிரி உட்காரும் கொடுமையிலிருந்தும் கட்டுப்பாட்டு பயங்கரத்திலிருந்தும், ஆசிரியரின் கோலிடமிருந்தும் தப்பி உடனடியாக ஒளிய ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சுரங்கப்பாதை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” என்றார்.

     பாலீ ஃப்ரையிரே என்ற கல்வியாளர் நடத்திய ஆய்வில் ஆசிரியர் மாணவர் உறவு என்பது....

ஆசிரியர் பாடம் நடத்துபவர் ; மாணவர் நடத்தப்படுபவர்.
ஆசிரியருக்கு எல்லாம் தெரியும்; மாணவருக்கு ஒன்றும் தெரியாது.
ஆசிரியர் பேசுவார்; மாணவர்கள் கவனிப்பார்கள்.
நிகழ்ச்சிப்போக்கை ஆசிரியர் தீர்மானிப்பார்; மாணவர்கள் தங்களை வடிவமைத்துக்கொள்ள வேண்டும்.

ஞாயிறு, செப்டம்பர் 16

என்பெயர் கவிதை


உன்னைப் பார்த்தநாள் முதல்
நானும் கவிஞனானேன்
உன்னை மலரென்றேன்
நிலவென்றேன்
ஒளியென்றேன்
குழந்தையென்றேன்
தாயென்றேன்
கற்பனையில் தோன்றும் 
அத்தனையும் நீயென்றேன்
நானும் கவிஞன்தான்!

வெள்ளி, செப்டம்பர் 14

எனக்கு ஒரு வயசு

          அன்பிற்கினிய வலைத்தள நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 
அனைவரையும் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறேன். 


     சென்ற வருடம் செப்டம்பர் 15ல் விச்சு'வால்' தொடங்கப்பட்ட அலையல்ல சுனாமியாகிய நான் இன்றுடன்   ஒரு வருடத்தினை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து விட்டேன். 

சனி, செப்டம்பர் 8

கழுதையும் குருவியும்

                             ஆளுக்கொரு உரிமை என நாடுகளுக்கிடையேயும் உலக வர்த்தக அமைப்புடனும்  போடப்படும் ஒப்பந்தத்தினை கேலி செய்யும் வகையிலும் அது ஒரு ஏமாற்று வேலை என்பதையும் சொல்லும் விதமாக ஒரு கதை. ”முதலாவது”,  “இரண்டாவது” என்று சொல்லப்படுவதன் அர்த்தமின்மையையும் இந்தக் கதையின்மூலம் விளங்கிக் கொள்ளலாம். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் அறிவொளி கற்போர் கூறிய கதையின் தொகுப்பிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. இது ஒரு எளிய கதைதான் என்றாலும் பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது.

             
     கழுதையும் குருவியும் நண்பர்களாம். இரண்டும் சேர்ந்து விவசாயம் செய்ய ஒப்பந்தம் செய்துகொண்டன. ஒப்பந்தத்தில் ஆளுக்கு ஒரு உரிமை தரப்பட்டது.

வெள்ளி, செப்டம்பர் 7

சாக்கடை மணம்

                அந்த ஊரில் இது கொஞ்சம் பெரிய பாலம்தான். இரண்டு பகுதிகளையும் இணைக்கும் முக்கியமான பகுதி அது. பாலத்தின் கீழ் ஒரு ஆறு ஓடியதற்கான அடையாளம் இன்னும் மாறவில்லை.  இப்போதெல்லாம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தொடர்ச்சியாக மழை பெய்தால் மட்டுமே அதில் நீர் ஓடும். மற்ற நாட்களில் எல்லா ஊரிலும் ஓடிக்கொண்டேயிருக்கும் அதே சாக்கடைதான் இங்கும் ஓடுகிறது.

                    எல்லா ஊர்களிலும் ஆறு தன் அடையாளத்தினை இழந்து வருகிறது. அது ஓடிய வழித்தடங்களை மனிதன் தனதாக்கிக்கொண்டான். ஆறு தன்னை சுருக்கிக்கொண்டது. தன் உடம்பில் ஓடிய சுத்தமான நீரை அது இழந்து பல காலமாகிவிட்டது. தன் உடம்பையும் வருத்திக்கொண்டு  பல குப்பைகளையும், நாற்றமெடுக்கும் நீரையும் மட்டுமே தன்னுள் அடக்கிக்கொண்டுள்ளது. அதிலிருந்து வரும் வாசனையை ஏற்க மனமில்லாமல் மனிதன் மூக்கைப்போத்திக்கொள்கிறான்.  அத்தனை கழிவுகளும் அவனிடமிருந்துதான் வந்தன என்பதை அறியாமலும் அதனை மனம் ஏற்காமலும் உள்ளான்.

புதன், செப்டம்பர் 5

ஒரு டன் மரமும் ஒரு டன் இரும்பும்

           எது அதிக கனமானது?-- ஒரு டன் மரமா? ஒரு டன் இரும்பா? சிலர் யோசிக்காமல் ஒரு டன் இரும்புதான் என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் ஒரு டன் மரம்தான் அதிக கனமானது. நம்பமுடியாவிட்டாலும் இதுதான் உண்மை.

ஞாயிறு, ஆகஸ்ட் 26

உலக பெண் விஞ்ஞானிகள்

அலையல்ல சுனாமி
           இரா.நடராசன் அவர்கள் எழுதிய உலக பெண் விஞ்ஞானிகள் என்ற நூலில் இதுவரை நாம் கேள்விப்படாத பெண் விஞ்ஞானிகளின் பட்டியலைத் தந்துள்ளார். பெண் விஞ்ஞானிகள் யார்? யார்? எனக்கேட்டால் நிச்சயம் ஒரு சில பெயர்களைத்தவிர யாரையும் நமக்குத்தெரியாது.உலகின் முதல் விஞ்ஞானி ஒரு பெண்ணாகவே நிச்சயம் இருந்திருக்கவேண்டும் என சிந்தனையாளர் லெவிஸ்ட்ராஸ் குறிப்பிட்டுள்ளார். ஆண் விஞ்ஞானிகளின் பெயர்களைத் தெரிந்திருக்கும் அளவுக்கு பெண் விஞ்ஞானிகள் பெயர்களை நாம் தெரிந்திருப்பதில்லை. அதற்கான காரணம் ஆணாதிக்கமா? அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதா? என்பது தெரியவில்லை. பெண்களின் சிந்தனைகளை வளரவிடக்கூடாது என்ற எண்ணமாகக்கூட இருக்கலாம்.

சனி, ஆகஸ்ட் 25

குழந்தையிடம் கற்றுக்கொள்

அனைத்தும் அறிந்ததாக நினைக்கும் மனிதா
குழந்தையிடம் கற்றுக்கொள்
பழையதை உடனே மறக்க
பொறாமையை பொசுக்க
சிறிய பொருளிடத்திலும் இன்பம் காண
கோபத்திலும் கொஞ்ச!

ஞாயிறு, ஆகஸ்ட் 19

காகித கப்பல்

அலையல்ல சுனாமி

அழகழகான 
கப்பல்  செய்து 
விட்டுகொண்டுதான்
இருந்தேன்
நீயும் ரசிக்கிறாய்
என நினைத்து...
அடிப்பாவி! 
விட்டது கப்பலை அல்ல
என் கவிதையை!
-------------------------------------------------------

வெள்ளி, ஆகஸ்ட் 3

மனிதர்கள் வாலை இழந்த கதை

             உலகம் குழந்தையாக இருந்தபோது எனும் நூலில் இந்தியப் பழங்குடியினரின் பலவகையான பழங்கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.  இந்த அழகிய நூலைத் தமிழில் பிரிஜிட்டா ஜெயசீலன் எழுதியுள்ளார். சில கதைகள் சுவாரஸ்யமானவை. மலைவாழ் மக்கள் மனிதன் தோன்றியது குறித்துப் பல்வேறு அபிப்பிராயங்கள் கொண்டுள்ளனர். சிலர், கடவுள் தம் கைகளினால் முதல் மனிதனைக் களிமண் கொண்டு உருவாக்கினார் எனக் கூறுகிறார்கள்.

TRB TET PAPER I ANSWER KEY

ஞாயிறு, ஜூலை 29

அன்புடன் காதலிக்கு

நான் நலம்...
உன் நலமறிய ஆவல்...


நீ எப்போதோ 
தப்பும் தவறுமாய் எழுதிய
காதல் கடிதத்தை இப்போதும்
படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்!


நாம் சுற்றி சுற்றி
ஆடிய வேப்பமரமும்
வெட்டப்பட்டுவிட்டது!

வெள்ளி, ஜூலை 27

PG EXAM RESULT 2012

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய 2012 -2013 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கான இணைப்பு பெற இங்கே கிளிக் செய்யவும்.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு உத்தேசமாக அழைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியல் பெற இங்கு கிளிக் செய்யவும்.

ஞாயிறு, ஜூலை 22

பொழுது போகவில்லையா?

இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து படங்களும் கூகுள் தேடலில் கிடைத்தவை. மூட மனிதர்களின் மூடநம்பிக்கைகள்தான் இவை.இப்போதுள்ள பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைப்பதே கஷ்டம். அதிலும் தவளைக்கும் பெண்ணுக்கும் கல்யாணமாம். யாருக்கு நன்மையோ இல்லையோ? சுற்றியுள்ளோருக்கும் மீடீயாக்களுக்கும் நல்லா பொழுது போகும்.
அலையல்ல சுனாமி

பெண்ணுக்கு தவளை என்றால் ஆணுக்கு நாய்தான். நாய் வாழ்க்கை என்பது இதுதானோ?

ஞாயிறு, ஜூலை 15

TET Tentative Answer key 2012

12.07.2012 அன்று ஆசிரியர் தகுதித்தேர்வு நடந்தது. இத்தேர்வில் சுமார் 6.50 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். இத்தேர்விற்கான உத்தேச பதில்கள் APPOLO STUDY CENTRE வெளியிட்டுள்ளார்கள். அதன் இணைப்பு கீழே உள்ளது. 
TET Paper I
TET Paper II

இத்தேர்விற்கான உத்தேச பதில்கள் விடியல் பயிற்சி மையத்தாரும் வெளியிட்டுள்ளார்கள். அதன் இணைப்பு கீழே உள்ளது.
TET Paper I
TET PAPER II MATHS & SCIENCE
TET PAPER II SOCIAL SCIENCE

SUCCESS ACADEMY தாம்பரம் உத்தேச பதில்களின் இணைப்பு தாள் 1 மற்றும் தாள் 2 - சமூக அறிவியல்

PAPER II அதிகாரப்பூர்வ பதில்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TRB) வெளியிடப்பட்டுள்ளது.
CHILD DEVPT AND PEDOGOGY
TAMIL
ENGLISH
MATHS AND SCIENCE
SOCIAL SCIENCE

வியாழன், ஜூலை 12

திரிபுக்காட்சி



முகத்தில் தண்ணீர் பட்டது
என்னவனாகத்தான்
இருக்கவேண்டும்
காலையில் அவன்
என்னை எழுப்பும்
ஸ்டைலே அதுதான்!

ஞாயிறு, ஜூலை 8

பெண்களை இம்ப்ரஸ் செய்வது ! காமெடி கலாட்டா !

ஒரு பெண்ணை இம்ப்ரஸ் பண்ணுவதற்கு ஒவ்வொரு ஆணும் பல முயற்சிகளை மேற்கொள்வான். ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு காரணத்திற்காக இம்ப்ரஸ் ஆகலாம். ஏதாவது உதவி செய்வது, ஸ்டைலாக ஏதாவது (கோமாளித்தனம்) செய்வது...

புதன், ஜூலை 4

கமு.. கபி


கல்யாணத்துக்கு முன் கல்யாணத்துக்குப்பின்
அன்பே லூசே
நீ பேசினால் காதில் தேன் பாய்கிறது வாயை கொஞ்சம் மூடு
உனக்கு இந்த டிரெஸ் சூப்பர் என்னடி டிரெஸ் இது.. பிச்சைக்காரி மாதிரி
மொபைலில் நீ பேசிக்கிட்டே இருக்கனும் ம்ம்.. அப்புறம்.. சரி.. வை
உன் கை பட்டா எல்லாமே சூப்பர் கையை வச்ச வெட்டிருவேன்
உன் பக்கத்தில் உட்கார்ந்தா சொர்க்கம்  தள்ளிதான் உட்காரேன்
நீ சமைச்சாலே வாசனை தூக்குது என்னடி குழம்பு வச்சிருக்க.. உப்புமில்லை. உறப்புமில்லை
நீ பார்த்தாலே பத்திக்குது நீ பார்த்தாலே பத்தி எரியுது
நீ சிரிச்சாலே சொக்குது அதென்ன சிரிப்பு .. வாயை கோணிக்கிட்டு
இன்னும் கொஞ்ச நேரம் பேசேன் தூங்க விடு
உன் மடியில படுக்கணும் கொஞ்சம் தள்ளிப்படு
தியேட்டருக்கு வந்தாலும் உன்னையத்தான்  பார்க்கனும்போல இருக்கு சினிமாவப் பார்க்க விடுறியா
நீ விடிய விடிய பேசினாலும் கேட்டுக்கிட்டே இருப்பேன் கொர் ... கொர்...

அழகான பாடல் ஒன்று :




கொசுறு: கல்யாணத்துக்கு அப்புறமும் கல்யாணத்துக்கு முன்னாடி மாதிரியே இருங்க... வாழ்க்கையும் இனிக்கும்.

புத்தகச் சுமை

தனியார் பள்ளிகள், தேவையில்லாத நோட்டுப் புத்தகங்களை மாணவர்கள் கொண்டுவர நிர்பந்தம் செய்யாமல், தேவையானவற்றை மட்டுமே கொண்டு வர, பள்ளி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா உத்தரவிட்டார்.
இளம் வயதிலேயே, அதிகமான புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை சுமப்பதால், மாணவ, மாணவியர், முதுகு தண்டுவடம் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.


வெள்ளி, ஜூன் 22

மனிதனின் கட்டுமானம்

மனிதனுக்கு வினோதமான ஆசைகள் வரும். ஒரு பொண்ணு பார்த்தால்கூட எப்படியெல்லாம் இருக்கவேண்டுமென்று ஆசைப்பட்டு இறுதியில் அவன் எதிர்பார்க்காத வகையில் ஒரு பொண்ணைத்தான் திருமணம் முடிப்பான். 
கட்டிடம் கட்டுவதிலும் நிறைய பிளான் பண்ணி ஆசையாக கட்டுவான். வாஸ்துபடி கட்டும்போது சில காமெடிகளும் அரங்கேறும். பில்டிங் ஸ்ட்ராங் ஃபேஸ் மட்டம் வீக்கு... யாருக்கு? யாருக்கோ... என்பதுபோல சில காமெடிகள் வலையில் சிக்கியது.

சனி, ஜூன் 16

மானுட உடம்பின் மகத்துவம்


”உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்

உடம்பிலே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே"     

                            -   திருமூலரின் திருமந்திரம்

வியாழன், ஜூன் 14

TRB PG 2012 ZOOLOGY ANSWER KEY

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2012 ல்(TRB) நடத்தப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கான (PG) விலங்கியல் பாடப்போட்டித்தேர்விற்கான பதில்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான இணைப்பு பெற கீழ்க்கண்ட இணைப்பினை கிளிக் செய்யவும். 
BOOK A
BOOK B
BOOK C
BOOK D

TRB PG 2012 MATHS ANSWER KEY

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TRB) நடத்தப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கான கணிதப் போட்டித்தேர்விற்கான (2012)  பதில்கள் . இதற்கான இணைப்பு பெற கீழ்க்கண்ட இணைப்பினை கிளிக் செய்யவும். 
BOOK A
BOOK B
BOOK C
BOOK D


ஞாயிறு, ஜூன் 10

புதன், ஜூன் 6

TRB PG 2012 ANSWER KEY

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TRB) நடத்தப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்விற்கான (2012)  பதில்கள் . ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட பதில்கள். இதற்கான இணைப்பு பெற கீழ்க்கண்ட இணைப்பினை கிளிக் செய்யவும்.


                                                       

செவ்வாய், ஜூன் 5

PG TRB EXAM 2012 TAMIL ANSWER KEY

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கான  தமிழ் பாடத்திற்குரிய (2012)  பதில்கள்.  விடியல் மையத்தாரின் உத்தேச பதில்களின் இணைப்பு பெற  
தமிழ் பாடம்
விடியல் பயிற்சி மையத்தாரின் தமிழ் பாடத்திற்குரிய உத்தேச கட் ஆப் மதிப்பெண் விபரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பதிலகளின் இணைப்பு பெற
BOOK A
BOOK B
BOOK C
BOOK D

ஞாயிறு, ஜூன் 3

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு ( Continuous and Comprehensive Evaluation ) 
    வரும் (2012 - 2013 ) கல்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் முப்பருவத்தேர்வு முறை கடைப்பிடிக்கப்படுகிறது. புத்தகங்கள் தொகுதி 1 ல் தமிழ் மற்றும் ஆங்கிலமும், தொகுதி 2 ல் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியலும் இருக்கும். மூன்று பருவத்திற்கும் தனித்தனிப் புத்தகங்கள் வழங்கப்படும். முதல் பருவம் ஜீன் முதல் செப்டம்பர் வரை, இரண்டாம் பருவம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை, மூன்றாம் பருவம் ஜனவரி முதல் ஏப்பிரல் வரை இருக்கும்.1 முதல் 8ம் வகுப்புவரை மதிப்பீடு முறையானது CCE  முறையில் இருக்கும்.

வெள்ளி, ஜூன் 1

இல்லை... இல்லை...


ஒரு பயிற்சியில் சொன்ன இல்லை... இல்லை... என்ற கருத்துடைய விசயத்தை அவர்கள் எங்கு சுட்டார்களோ! அதனைச் சுட்டு உங்களுக்கு தருகிறேன். ஆமா! இதெல்லாம் உண்மையா? 

மலைப்பாம்பிற்கு விஷமில்லை
ஈக்களுக்கு பற்களில்லை
பாலில் இரும்பு சத்து இல்லை
வண்ணத்துப்பூச்சிக்கு வாயில்லை
பாம்பின் கண்களுக்கு இமையில்லை
யமுனைநதி கடலில் கலப்பதில்லை
வடதுருவத்தில் நிலப்பரப்பில்லை
’சானா’ புழுவுக்கு தாயில்லை
முதலைக்கு நாக்கில்லை

வியாழன், மே 31

2012 - 2013 பள்ளிக்கல்வி சில தகவல்கள்

1 . 2012 -2013 ம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வி இயக்குநரின் வாழ்த்துக்களும் சில அறிவுரைகளும் இங்கு கிளிக் செய்து பெறவும்.
2. 2012- 2013 ம் ஆண்டிற்கான பள்ளி நாட்காட்டி பெற இங்கு கிளிக் செய்யவும்.
3. 2012 ம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட விடுமுறை இங்கு கிளிக் செய்யுங்கள்.
4. 2012 - 2013 ம் ஆண்டில் தொடக்க நிலை வகுப்புகளுக்கான அனைத்துப் பாடங்களின் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு பற்றிய கையேடுகள் பெற இங்கு கிளிக் செய்யவும்.
5. ஆசிரியர் தகுதிதேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்ப விபரங்கள் இங்கு கிளிக் செய்து தங்களின் விண்ணப்ப எண்ணை அளித்து சரிபார்த்துக் கொள்ளவும்.
6. 1ம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை முதல் பருவத்திற்கான பொதுப்பாடத்திட்டம் இங்குள்ளது.

புதன், மே 30

PG TRB EXAM 2012 GK AND EDUCATION ANSWER KEY

இங்கு கிளிக் செய்து 2012ல் முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வில் இடம்பெற்றபொது அறிவு மற்றும் கல்வியியல் சம்பந்தமான வினாக்களுக்கான விடைகள் பெறவும். இந்த பதில்கள் வேறொரு தளத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. இதில் சில (6 வினாக்களுக்கு) தவறுகள் இருப்பதாக ஒரு நண்பர் குறிப்பிட்டுள்ளார். பதில் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிட்டால் மற்றவர்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும்.

லியோனியின் - சினிமா சீரழிக்கிறதா?சீர்படுத்துகிறதா?

சினிமா சீரழிக்கிறதா? சீர்படுத்துகிறதா? என்ற லியோனியின் சிரிக்கவைக்கும் நகைச்சுவை பட்டிமன்றத்தின் ஒரு சிறிய பகுதி. கீழே உள்ள ப்ளே பட்டனை கிளிக் செய்து கேட்டு ரசியுங்கள்.

திங்கள், மே 28

TET MODEL QUESTIONS LINK

ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் (TRB) நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET)  போட்டித்தேர்வில் கேட்கப்படும் பாடங்கள் மற்றும் கல்வியியல் சம்பந்தமான  பகுதியில் கேட்கப்படும் வினாக்களின் இணைப்புகள் இங்கே தரப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு ஜீன் 3 லிருந்து ஜீலை 12ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் அறிவித்துள்ளார். காலம் அதிகம் போன்று தோன்றினாலும் படிப்பதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

ஞாயிறு, மே 27

இலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் பகுதி 4

alaiyallasunami
நிறைய தமிழ் புத்தகங்கள், நாவல்கள், சிறுகதைகள், இலக்கியங்கள் போன்றவை இணையத்தில் காணக்கிடைக்கின்றன. அவற்றின் இணைப்புகளை மட்டும் தொகுத்து ஏற்கனவே மூன்று பகுதிகளில் வழங்கியுள்ளோம். இவை இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் புத்தகங்களின் இணைப்பு மட்டுமே.  என்னால் பதிவேற்றம் செய்யப்பட்டவை அல்ல. முந்தைய பகுதிகள் செல்ல கீழே உள்ள இணைப்பினை கிளிக் செய்யவும்.

சனி, மே 26

இலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் பகுதி 3

alaiyallasunami
நிறைய தமிழ் புத்தகங்கள், நாவல்கள், சிறுகதைகள், இலக்கியங்கள் போன்றவை இணையத்தில் காணக்கிடைக்கின்றன. அவற்றின் இணைப்புகளை மட்டும் தொகுத்து ஏற்கனவே இரண்டு பகுதிகளில் வழங்கியுள்ளோம். இவை இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் புத்தகங்களின் இணைப்பு மட்டுமே.  என்னால் பதிவேற்றம் செய்யப்பட்டவை அல்ல. முந்தைய பகுதிகள் செல்ல கீழே உள்ள இணைப்பினை கிளிக் செய்யவும்.

வியாழன், மே 24

மயிலிறகு


அலையல்ல சுனாமி











அம்மா அப்பாவை
மறக்க
ஆங்கில வழிக்கல்வி
இனிமேல் மம்மி டாடிதான்

வகுப்பறையில்
அக்கம்பக்கம் பார்க்காமல்
அன்னம்தண்ணீர் உண்ணாமல்
அந்நியனாய் ஒதுக்கப்பட்டேன்
அப்போதுதான் அறிவு வளருமாம்

செவ்வாய், மே 22

வளைந்து கொடுக்கும் பெண்

இன்றைய நவநாகரீக!!! உலகில் பெரும்பாலான குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகம் வருகிறது. அதுவும் கணவன் மனைவிக்குள்தான் பிரச்சினைகள் அதிகம். திருமணமான ஒரு மாதத்தில் விவாகரத்தில் முடிவடைகிறது. குறிப்பாக நானா? நீயா? என்பதின் பிடிவாதப் போக்குதான் காரணம். இதில் யார் விட்டுக்கொடுப்பது என்பதில் தொடங்கி அனைத்துமே பிரச்சினைதான். தான் மட்டுமே புத்திசாலி என்பது போலவும் மற்றவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் என்பது போலவும் சிலபேர் நடந்துகொள்வார்கள். அதிலும் கணவன் என்பவன் தனக்குத்தான் எல்லாம் தெரியும், தான் மட்டுமே முடிவுகள் எடுக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாய் இருந்தால் அந்த குடும்பம் உருப்பட்ட மாதிரிதான். இதனை ஒரு (தமிழ் தெரிந்த) நண்பனிடம் சொன்னால் திருவள்ளுவரே மனைவியின் பேச்சினை கேட்க கூடாது என்று சொல்லியுள்ளார் எனக்கூறி ஒரு குறளையும் கூறினான்.

தனித்த மரம்

அலையல்லசுனாமி

            சிறுவயதில் எங்களுக்கு பொழுதுபோக்கே மாரியம்மன் கோவிலில் இருக்கும் வேப்பமரத்தடியில் விளையாடுவதுதான். பொழுதுபோக்கிற்கென்று எந்த விசயமும் கிடையாது. தொலைக்காட்சி, சினிமா தியேட்டர், பத்திரிகை என்று எதுவுமே பார்த்தறியாத நாட்கள் அவை. தினமலர் பத்திரிகை மட்டும் வசந்தா சைக்கிள் கடையில் வாங்குவார்கள். ஆனால் அதைப்படிக்க மதியம் ஆகிவிடும். சின்னப்பையன்களைத் துரத்திவிடுவார்கள். மதியம் வந்தால் தலைப்புச் செய்திகள் மட்டும் புரட்டிப் பார்த்துக்கொள்ளலாம். வெள்ளிக்கிழமையானால் காலையில் சீக்கிரம் சென்று க்யூவில் நிற்க வேண்டும். சிறுவர் மலர் அப்போதுதான் கைகளில் கிடைக்கும். இல்லையென்றால் இரவு ஏழுமணிக்குத்தான் கிடைக்கும். நிறைய பசங்க படிக்க காத்துக் கொண்டிருப்போம். 

திங்கள், மே 21

சாரி... மொக்கை பதிவை விரும்புபவர்கள் மட்டும் படிக்கவும்

இன்றைய காலகட்டத்தில் நாம் மிகவும் பாதுகாப்பாக வாழ்வது ரொம்ப முக்கியம். எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் நோய்கள் மிகவும் எளிதாகப் பரவுகின்றது. பாதுகாப்பு கவசங்கள் அணிந்துகொண்டு வாழ்வது சாத்தியமா? நம்முடைய பொருள்களை திருடர்களிடமிருந்து பாதுகாப்பது எப்படி? என்று ஒரு விரிவான அலசல். 

ஞாயிறு, மே 20

இலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் பகுதி 2

தமிழ் புத்தகம்
இலவசமாக அதிகமான தமிழ் புத்தகங்களைப் படிக்கவும், தரவிறக்கம் செய்யவும் நிறைய தளங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றினை முந்தைய பகுதியில் பார்த்தோம். மேலும் சில தளங்களின் தொடர்ச்சியை இப்போது பார்க்கலாம்.
புத்தகங்களை வாங்கவோ அல்லது விற்கவோ விரும்புபவர்களுக்கு சிறந்த தளம்   தமிழ் புக்மார்க்கெட். இங்கு புத்தகங்கள் தொடர்பான விளம்பரங்கள், பதிப்பகங்கள்,மதிப்புரை போன்றவை உள்ளன.

வெள்ளி, மே 18

இலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் தரவிறக்க

தமிழ் புத்தகம்
தமிழ் புத்தகங்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்ய சிறப்பான இணையதளங்கள் பல உள்ளன. இவை எங்கே கிடைக்கும் என்று தேடி அலைவோருக்கு அவற்றினை மொத்தமாகத் தொகுக்கும் ஒரு சிறிய முயற்சி. இன்னும் நிறைய தளங்கள் உள்ளன. நான் தேடியவற்றில் கிடத்த தளங்களை மட்டும் தொகுத்துள்ளேன்.அவற்றில் மிகச்சிறப்பான தளங்கள் எனில் ஓபன்ரீடிங், அழியாச்சுடர்கள்தமிழ் தொகுப்புகள், சிலிக்கான் ஷெல்ப் போன்றவையாகும்.  ஓபன் ரீடிங் தளத்தில் வகைவகையாகப் புத்தகங்களைப் பிரித்து வைத்துள்ளனர்.அவை

வியாழன், மே 17

விகடன் பத்திரிகையிலிருந்து மதன் விலக்கப்பட்டார்


பல ஆண்டுகளாக ஆனந்தவிகடன் பத்திரிகைக்கு கேள்வி பதில் எழுதி வருபவர் மதன். அதற்கென்றே வாசகர் வட்டம் உள்ளது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பத்திரிகைக்காக உழைத்துள்ளார்.இணை ஆசிரியராகவும், கார்ட்டூனிஸ்டாகவும் பல பொறுப்புகளை வகித்துள்ளார். ஆனால் விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் செய்ய ஆரம்பிக்கவும் இவருக்கும் நிர்வாகத்திற்கும் பிரச்சினை வெடித்தது. எனவே இவர் பல பொறுப்பிலிருந்து சுமூகமாக விலகிக்கொண்டார். ஆனால் மதனின் கேள்வி பதில்கள் மற்றும் கார்ட்டூன்கள் மட்டும் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருந்தது.  கடந்த 2.5.2012 விகடனில் மதன் கேள்வி பதில்கள் பகுதியில் வெளியான ஒரு புகைப்படம் விகடனிலிருந்தே மதனை வெளியேற்றியுள்ளது.

புதன், மே 16

நடுவர் முருகனின் பட்டாசு பேச்சு

உழைப்பின் முக்கியத்துவத்தையும் படிப்பின் அவசியத்தையும் வலியுறுத்தும் மதிப்பிற்குரிய தேனி P.முருகன் அவர்களின் அற்புதமான படபட பட்டாசு பேச்சு. எந்தப் பொருளையும் உருவாக்குபவன் விலையை அவனே நிர்ணயம் செய்கிறான். ஆனால் ஒரு விவசாயி உற்பத்தி செய்யும் பொருட்கள் மட்டும் அவனால் விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை.வேலைக்குப் போகும் தாய் தன் குழந்தையைக் கூட கவனிக்காமல் தன் நேரத்தினை உழைப்பிற்காக அர்ப்பணிக்கிறாள். உழைப்பாளிகள் நமது நாட்டில் சுரண்டப்படுகிறார்கள்.

ஞாயிறு, மே 13

கிராமங்களில் காணாமல் போனவை

கிராமங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே பல விசயங்கள் காணாமல் போய்விட்டன. சில தொலைந்து வருகின்றன.அவற்றில் சிலவற்றினை கூகுளின் துணையோடு தொகுத்துள்ளேன். சில பொருட்களின் புகைப்படங்கள் கூகுளில் தேடினாலும் கிடைக்கவில்லை.உதாரணமாக பம்ப்செட் வருவதற்கு முன்னர் கமலையில் நீர் இறைக்கும் உருளை, கமலைக்குழி போன்றவைதான் நீர் இறைக்கப் பயன்பட்டன. . அதில் ஒரு மாட்டுத்தோலிலான பை கட்டி நீர் இறைப்பார்கள். அதன் பெயர்கூடத் தெரியவில்லை.அதன் புகைப்படம் தேடினாலும் கிடைக்கவில்லைஅதுபோல நெல்லினை சேமித்து வைக்கும் குலுக்கை என்று சொல்வார்கள். அதுவும் கிடைக்கவில்லை. இப்படி இன்னும் நிறைய பொருட்கள் தமிழ்நாட்டிலுள்ள கிராமங்களில் இருந்து தொலைந்து வருகின்றன. 

வெள்ளி, மே 11

வைத்தியலிங்கபுரம்

இது அப்படி ஒன்றும் பிரபலமான ஊர் இல்லை. நான் பிறந்து வளர்ந்த ஊர் என்பதால் வருங்காலத்தில் பிரபலமாகும் வாய்ப்பு உள்ளது.  வைத்தியலிங்கபுரம் ஒரு சிறிய கிராமம் . இந்த ஊர் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது. வைத்தியநாதசுவாமி கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடத்தில் அமைந்துள்ளதால் வைத்தியநாதபுரம் என்ற பெயர்தான் ஆரம்பத்தில் இருந்தது. காலப்போக்கில் வைத்தியலிங்கபுரம் என்றாயிற்று. வெள்ளைக்காரன் ஆட்சி காலத்தில் ஒரு சிறிய ரயில்வே ஸ்டேசன் இருந்தது. அதில்தான் அதிகமான போக்குவரத்து நடைபெற்றது. ஆனால் அது பல வருடங்களுக்கு முன்பே அகற்றப்பட்டது. 3 கி.மீ தூரத்திலேயே திருவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேசன் உள்ளதால் இந்த நடவடிக்கை எனக்கூறினர். அதன் போட்டோ கிடைக்கவில்லை. 

செவ்வாய், மே 8

மனைவி புராணம்

அலையல்ல சுனாமி

காளையையும் அடக்க வேண்டாம்
ஊர் கல்லையும் தூக்க வேண்டாம்

டிஸ்கொதே போக வேண்டாம்
எல்சிடி வாங்க வேண்டாம்

சனி, மே 5

ஆனந்த விகடன் கவிதைகள்

2002ம் ஆண்டு ஆனந்த விகடன் ஒரு கவிதைப்போட்டி நடத்தியது. அதில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை 17.11.2002 அன்று ஒரு சிறு இணைப்பாக 75முத்திரை கவிதைகள் என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தார்கள். அவற்றில் எனக்குப் பிடித்தமான பத்து கவிதைகள் உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு பகிர்ந்துள்ளேன். விருப்பமிருந்தால் உங்களுக்குப் பிடித்த ஒரு கவிதையின் பொருள் வருமாறு நீங்கள் உங்கள் படைப்பினை (கவிதையினை) பகிர்ந்துகொள்ளலாம். பகிர்வு நகைச்சுவையாகவோ , சோகமாகவோ, கிண்டலாகவோ அல்லது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்(ஆத்தாடி எம்புட்டு சாய்சு).

வியாழன், மே 3

ஃபன்னி

ஐய்யோ!!! இது பன்னி இல்லீங்க...ஃபன்னி. அதாங்க இங்கிலீஸ்ல சொல்லுவாங்களே ஆங்... அதான் FUNNY. நீங்கள் பார்த்த வீடியோவாக இருந்தாலும் கொஞ்சம் ரசிக்கலாமே.ஓகே... இப்போ அந்த ஃபன்னி (ம்ம்ம்...FUNNY) வீடியோவைப் பார்க்கலாமா. அனைத்து வீடியோக்களும் ரசிக்க மட்டுமே.
பர்ஸ்ட் வீடியோ செம சூப்பரான வீடியோ. இது ஒரு ஜப்பானிஸ் சர்க்கஸ். பார்த்துக்கிட்டே இருக்கலாம்.

கல்வியியல் வினாக்கள் (Education questions)

ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் (TRB) நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET)  மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான (TRB PG) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கல்வியியல் (Education) சம்பந்தமான  பகுதியில் கேட்கப்படும் வினாக்களின் தொகுப்பு இங்கே தரப்பட்டுள்ளது. இதனை டவுன்லோட் செய்ய இயலவில்லை. இதனை COPY செய்து WORD Documentல் PASTE செய்து கொள்ளவும். முந்தைய வினாக்களைக் காண இங்கே கிளிக் செய்யவும். நிலவைத்தேடி என்ற வலைப்பூவில் 3000 வினாக்களின் தொகுப்பு உள்ளது. தற்போது அதில் முதற்பகுதி வெளியிடப்பட்டுள்ளது. அதனைப்பெற இங்கு கிளிக் செய்யவும். 

  • கற்றலின் முக்கிய காரணி ஒன்று - கவர்ச்சி
  • வெகு நாட்கள் நமது நினைவில் இருப்பவை - பல்புலன் வழிக்கற்றல்
  • கற்றல் என்பது - அடைதல், திறன், அறிவு, மனப்பான்மை
  • நடத்தை கோட்பாட்டின் அடிப்படை - தூண்டல் - துலங்கல்
  • சராசரி நுண்ணறிவு ஈவு - 90 - 109
  • பிரயாஜெயின் ( (பியாஜே)) கோட்பாடு குழந்தைகளின் - அறிவு வளர்ச்சி பற்றியது
  • ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் - பெற்றோர்.

புதன், மே 2

TRB BOTANY

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TRB)  நடத்தப்படும் முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வுக்கு (TRB PG BOTANY) தயார் செய்யும் விதத்தில் தாவரவியல் பாடத்திற்கான வினாக்கள் இங்கு தரப்பட்டுள்ளது. முந்தைய வினாக்களைக் காண இங்கு கிளிக் செய்யவும்.

திங்கள், ஏப்ரல் 30

ஆயிஷா

கணையாழி குறுநாவல் போட்டியில் 1996ல் முதல்பரிசு பெற்ற நூல் ஆயிஷா. இரா.நடராசன் அவர்கள் எழுதிய ஆயிஷா என்ற அற்புதமான கதை ஏப்பிரல் 2005ல் பாரதி புத்தகாலயம் சிறுநூலாக ரூ5/- விலையில் வெளியிட்டிருந்தது.  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்ட ஏன்? எப்படி? என்ற நூலிலும் இந்தக்கதை முதல் பக்கத்தில் உள்ளது. ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரையாக இந்தக்கதை அமைந்திருக்கும். இதுவரை எட்டு மொழிகளில் இக்கதை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்றுள்ளது.  இந்தக்கதையின் வீடியோ வடிவம் தமிழ்நாட்டிலுள்ள ஒன்று முதல் எட்டுவரை வகுப்பு எடுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்களுக்கான குறுவளமையப் பயிற்சியில் ஒளிபரப்பப்பட்டது. ஏனைய பிற ஆசிரியர்கள் மற்றும் அனைவரும் இந்த குறும்படத்தினை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு வெளியிடப்பட்டுள்ளது.

வெள்ளி, ஏப்ரல் 27

சாகித்ய அகாதமி

சாகித்ய அகாதமி பரிசு வாங்கிய நூல்களின் பெயர், வருடம் மற்றும் நூலாசிரியர்களின் பெயர்கள் இங்கு வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் முதுகலை தமிழ் பாடம் ஆசிரியர் போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.

  1.  தமிழ் இன்பம் (கட்டுரைகள்) - 1955 - ரா.பி.சேதுப்பிள்ளை
  2.  அலைஓசை (புதினம்) - 1956 - கல்கி கிருஷ்ணமூர்த்தி
  3.  சக்ரவர்த்தி திருமகன் - 1958 - இராஜாஜி
  4.  அகல்விளக்கு (புதினம்) - 1961 - மு.வரதராசன்