வியாழன், ஆகஸ்ட் 15

வெறுப்பாய்...

      என்னையே எனக்கு பிடிக்காதபோது மற்றவர்களுக்கு என்னைப் பிடிக்காமல் போனதில் எனக்கு ஆச்சரியமொன்றுமில்லை. உலகத்தில் வெறுப்பு என்ற ஒன்று நிரந்தரமாகத் தங்கிப்போனது. தமக்கு பிடிக்காத ஏதோ ஒன்றின்மீது வெறுப்பு வருவது இயற்கைதான். அது உயிர்களிடத்தில் வரும்போதுதான் அதுவும் மனது என்ற ஒன்றைக்கொண்டிருக்கும் மனிதர்களிடத்தில் வரும்போதுதான் வெறுப்பின்மீது வெறுப்பு வருகிறது.


மனதினால்
நினைக்கும் ஆற்றல்
பெற்றதால்
மனிதனாகிறான்..!