ஞாயிறு, ஏப்ரல் 22

பச்சோந்தி பொழுதுகள்

நேரம் : அதிகாலை 4.00 மணி

இரவு முழுவதும் மொட்டைமாடியில் தூக்கம் வராமல் புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன். காற்று சில்லென்று வீசிக்கொண்டிருந்தது. உடம்பு குளிர்ச்சியாக இருந்தது. ஆனால் மனம் இன்னும் சூடாக இருந்தது. முந்தைய இரவில் உணவு உண்ணாததால் வயிறு பசிப்பதுபோல் இருந்தது.

நாலு மணி இருக்குமா என எண்ணிக்கொண்டிருக்கும்போதே பால்காரனின் சைக்கிள் சத்தம்.

ம்ம்ம்... மணி நாலு ஆயிடுச்சு.

இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் இன்று தீர்ந்துவிட்டது. வேறு வழியே இல்லை.இன்று இரவு நிச்சயம் அதனை முடித்துவிடவேண்டும். கயிறுதான் சரியான வழி. நம் வீட்டில் அதற்கு சரியான கயிறு இல்லை.