புதன், மே 16

நடுவர் முருகனின் பட்டாசு பேச்சு

உழைப்பின் முக்கியத்துவத்தையும் படிப்பின் அவசியத்தையும் வலியுறுத்தும் மதிப்பிற்குரிய தேனி P.முருகன் அவர்களின் அற்புதமான படபட பட்டாசு பேச்சு. எந்தப் பொருளையும் உருவாக்குபவன் விலையை அவனே நிர்ணயம் செய்கிறான். ஆனால் ஒரு விவசாயி உற்பத்தி செய்யும் பொருட்கள் மட்டும் அவனால் விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை.வேலைக்குப் போகும் தாய் தன் குழந்தையைக் கூட கவனிக்காமல் தன் நேரத்தினை உழைப்பிற்காக அர்ப்பணிக்கிறாள். உழைப்பாளிகள் நமது நாட்டில் சுரண்டப்படுகிறார்கள்.
உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லை. படிப்பவர்கள் நினைத்தால் உழைப்பாளிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தமுடியும் என்று வழக்கமான தன் நகைச்சுவையான பேச்சால் பார்வையாளர்களைத் தன்வசப்படுத்துகிறார். நீங்களும்தான் அந்த காணொளியினைப் பார்த்து ரசியுங்களேன்.





6 கருத்துகள்:

  1. //////////////////எந்தப் பொருளையும் உருவாக்குபவன் விலையை அவனே நிர்ணயம் செய்கிறான். ஆனால் ஒரு விவசாயி உற்பத்தி செய்யும் பொருட்கள் மட்டும் அவனால் விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை//////

    சுடும் நிஜம் :(

    பதிலளிநீக்கு
  2. தேனி முருகனின் பேச்சைக் கேட்க மீண்டும் வருகிறேன் விசு.. இப்போ பொறுமை இல்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசரமே இல்லை அதிரா. பொறுமையா வேலையை முடிச்சிட்டு வாங்க.

      நீக்கு
  3. வணக்கம் பாஸ்...
    உண்மையிலே அருமையான கருத்துக்கள் அடங்கிய சொற்பொழிவு...
    பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. பெற்றவர்கள் பிள்ளைகளிடம் தங்கள் ஆசைகளைத் திணிக்கிறார்கள்.குழந்தைகளைக் குழந்தைகளாகவே இருக்க விடுவதில்லை.நல்லதொரு பேச்சு.பேச்சுக்கள் மேடையோடு ஓய்ந்தே போகின்றன.வீதிக்கு வருவதில்லை !

    பதிலளிநீக்கு