புதன், செப்டம்பர் 5

ஒரு டன் மரமும் ஒரு டன் இரும்பும்

           எது அதிக கனமானது?-- ஒரு டன் மரமா? ஒரு டன் இரும்பா? சிலர் யோசிக்காமல் ஒரு டன் இரும்புதான் என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் ஒரு டன் மரம்தான் அதிக கனமானது. நம்பமுடியாவிட்டாலும் இதுதான் உண்மை.

         அதாவது ஆர்க்கிமிடிஸ் விதியின்படி (திரவங்களுக்கு மட்டுமல்ல.. வாயுக்களுக்கும் பயன்படுத்தலாம்) காற்றில் ஒவ்வொரு பொருளும் தனது எடையில் ஒரு பங்கை “இழக்கிறது”; இந்த எடையிழப்பு அப்பொருளினால் இடம்பெயர்க்கப்பட்ட காற்றின் எடைக்குச் சமமாகும். மரமும் இரும்பும்கூட தத்தம் எடையில் ஒரு பங்கை இழக்கின்றன. எனவே, அவற்றின் உண்மையான எடையைக் கண்டுபிடிக்க வேண்டுமானால், எடை இழப்பை கூட்டிக் கொள்ளவேண்டும். எனவே மரத்தின் உண்மையான எடை ஒரு டன் + அது இடம்பெயரச்செய்யும் காற்றின் எடை ஆகும்.
      அதுபோல இரும்பின் உண்மையான எடையும்  ஒரு டன் + அது இடம்பெயரச்செய்யும் காற்றின் எடை ஆகும். எனினும் ஒரு டன் இரும்பைவிட ஒரு டன் மரம் அதிக சுமார் 15 மடங்கு அதிகமான இடத்தினை அடைத்துக்கொள்ளும். ஆகவே  ஒரு டன் மரத்தின் உண்மையான எடை ஒரு டன் இரும்பின் உண்மையான எடையைவிட அதிகமாயிருக்கிறது. அல்லது, அதை வேறுவிதமாகச்சொன்னால் காற்றில் ஒரு டன் மரத்தின் உண்மையான எடை, காற்றில் அதே டன் எடையுள்ள இரும்பின் உண்மையான எடையைவிட அதிகமாயிருக்கிறது என்று சொல்லலாம்.
    ஒரு டன் இரும்பின் கனபரிமாணம் 1/8 கனமீட்டர்; ஒரு டன் மரத்தின் கன பரிமாணம் 2 கனமீட்டர். ஆதலால் இடம் பெயர்க்கப்பட்ட காற்றின் எடைகளில் உள்ள வித்தியாசம் கிட்டத்தட்ட 2.5 கிலோகிராம். ஒரு டன் மரம் ஒரு டன் இரும்பைவிட உண்மையிலேயே இவ்வளவு அதிக கனமுள்ளதாயிருக்கிறது!

நன்றி : பொழுதுபோக்குப் பெளதிகம்
                யா.பெரெல்மான்

14 கருத்துகள்:

  1. நல்லதொரு அறிவியல் விளக்கம்.

    பதிலளிநீக்கு
  2. அருமையாக விளக்கியுள்ளீர்கள். சுவாரஸ்யமும்.

    பதிலளிநீக்கு
  3. பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.
    என்னுடைய தளத்தில்

    தன்னம்பிக்கை -3

    தன்னம்பிக்கை -2

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா05 செப்டம்பர், 2012

    விச்சு அவர்களுக்கு

    ஒரு டன் மரமும் ஒரு டன் இரும்பும் - வலைப்பதிவு மிக அருமை.
    பொழுது போக்கு பௌதிகம் - யா.பெரல்மான் புத்தகத்தில் இது போல ஏராளமான அறிவியியல் விளக்கங்கள் மிகவும் அருமையாக கொடுக்கப்பட்டிருக்கும்.

    தங்களிடம் எனக்கு ஒரு மிகப் பெரிய வேண்டுகோள்: பொழுது போக்கு பௌதிகம் - யா.பெரல்மான் (பாகம்-1, பாகம்-2) புத்தகங்களின் முழு நகல்களை (நகல் மற்றும் தபால் செலவுகளை முழுவதும் நான் ஏற்றுக் கொள்கிறேன்) தயவு செய்து அனுப்பி வைக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இப்படிக்கு - அனந்த கிருஷ்ணன்.

    (குறிப்பு: தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை என்னுடைய l.anandakrishnan@gmail.com இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் என்னுடைய முழுவிவரங்களையும் தங்களுக்கு தெரிவிக்கிறேன். நன்றி)

    பதிலளிநீக்கு
  5. வியத்தகு தகவல்.. பாராட்டுக்கள் பகிர்வுக்கு !

    பதிலளிநீக்கு
  6. புதுமையாக இருக்கு விச்சு அண்ணா!

    பதிலளிநீக்கு
  7. வரலாறு திகைத்து நிற்கிறது! :)

    பதிலளிநீக்கு
  8. நிஜமாத்தான் சொல்றீங்களா?... கேள்வியில் ஒரு டன் என்றால்ல்.. நெறுக்கும்போதும் ஒரு டந்தானே அப்போ எப்படி வித்தியாசம் ஏற்படும், ஒரு வேளை, நிறுத்து வீட்டுக்கு வாங்கிப் போனபின் மீண்டும் நிறுக்கும்போது வித்தியாசம் தெரியலாமோ... அப்படி இருக்குமோ?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிவாளிகளுக்கு சாரி...(அதிராவுக்கு) என்னால் விளக்கம் சொல்ல இயலாது. ஒரு விஞ்ஞானிகள் மாநாடு ஏற்பாடு பண்ணி அதில் உங்களுக்கு தோன்றும் கேள்விகளை கேட்டு விளக்கம் பெற்றுக்கொள்ளலாம்.மாநாட்டுக்கு ஆகும் செலவு என்னுடையது. ஒரு டீயும் வடையும்தான் கேட்கணும்.

      நீக்கு
  9. இரும்பைவிட மரம் பாரமா.....இரும்பு மனதைச் சொன்னீங்களோன்னு மாத்தி யோசிக்கிறன் !

    பதிலளிநீக்கு
  10. அருமையாக விளக்கி உள்ளீர்கள்.அறிந்து கொள்ளக்கூடிய பகிர்வு.

    பதிலளிநீக்கு
  11. நல்லதொரு விஷயம் அண்ணா! அருமையான விளக்கம்!

    பதிலளிநீக்கு