வியாழன், மார்ச் 1

அமாவாசை,பௌர்ணமி,கிரகணம்

       சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வந்தால் பூமியை நோக்கியுள்ள சந்திரன் மீது சூரிய ஒளி பட வாய்ப்பில்லாததால் சந்திரனை நாம் காண முடியாது. இது அமாவாசை ஆகும். சந்திரன் சூரியனை மறைப்பதினால் சூரியன் மறைவதுபோல் தோற்றமளிக்கிறது. இது சூரிய கிரகணமாகும்.
     சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வந்தால் சந்திரன் மீதுபடும் சூரிய ஒளியினால் முழு நிலவினைக்காண முடியும். இது பௌர்ணமியாகும். பூமியின் நிழல் சந்திரன் மீது விழுகிறது. இதனால் சந்திரன் மறைவதுபோல் தோன்றும். இது சந்திரகிரகணம். இந்த நிழல் சந்திரப்பரப்பைக் காட்டிலும் கூடுதல்.இதனால் சந்திரகிரகணம் அதிகநேரம் நீடிப்பதாகத் தோன்றும்.

நன்றி : அனைவருக்கும் கல்வித்திட்டத்திற்காக தயாரிக்கப்பட்ட CDயில் இருந்து ஒரு சிறிய பகுதி இந்த காணொளி ஆகும்.



12 கருத்துகள்:

  1. வீடியோவில் எளிமையாக புரிகிறது.
    பகிர்வுக்கு நன்றிங்கோ...

    பதிலளிநீக்கு
  2. அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  3. கவிதை மொக்கைகளுக்கு மத்தியில் உபயோகமான பதிவு

    பதிலளிநீக்கு
  4. அருமையான பகிர்வு !
    பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  5. சின்ன வயசில் பந்தை வைத்துப் படித்தது ஞாபகம் வருது !

    பதிலளிநீக்கு