ஞாயிறு, ஜூலை 29

அன்புடன் காதலிக்கு

நான் நலம்...
உன் நலமறிய ஆவல்...


நீ எப்போதோ 
தப்பும் தவறுமாய் எழுதிய
காதல் கடிதத்தை இப்போதும்
படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்!


நாம் சுற்றி சுற்றி
ஆடிய வேப்பமரமும்
வெட்டப்பட்டுவிட்டது!

நாம் மல்லாக்கப் படுத்து
நிலவை ரசித்த அந்த
வைக்கப்போரையும் காணோம்!


சிரட்டையில் சோறும் குழம்பும்
வைத்து எனக்கு நீயும் 
உனக்கு நானுமாய் ஊட்டிய 
இடத்தில் பெரியதொரு மாடிவீடு!


உன் பெயரையும் 
என் பெயரையும் பொறித்து
வைத்த கள்ளிச்செடி இருந்த இடத்தில்
கான்வெண்ட் ஸ்கூலும் வந்திருச்சு!


பள்ளி முடிந்து வரும்போது
மாங்காய் திருடிய
ஊரின் ஒதுக்கப்புறமாய்
இருந்த மாமரத்தையும் காணோம்!


மரப்பலகையில் அமர்ந்து
எனக்கு முன்பு நீயும் 
உனக்குப் பின்பு நானுமாய் இருந்த 
வகுப்பறையில் வேறு யாரோ!


எல்லாம் மாறினாலும்
உன்னைக்காதலித்த
என் இதயம் மட்டும் அப்படியே!


என்ன என்னத்தையோ நேர்ந்துவிடும்
என் ஆத்தா ஆசையாய் 
கூப்பிட்டும் எங்கள் குலசாமி 
கோவிலுக்கு செல்லாமல்
என்குலசாமியான உனக்கு 
என்னையே நேர்ந்துவிட்டேன்!
என் விருப்பத்தினை
நிறைவேர்த்திடு என் தாயே!


இப்படிக்கு...
காதல் பக்தன்!





24 கருத்துகள்:

  1. பெயரில்லா29 ஜூலை, 2012

    ''...என்னையே நேர்ந்துவிட்டேன்!
    என் விருப்பத்தினை
    நிறைவேர்த்திடு என் தாயே!...''
    ஆகா அருமையான காதல் பக்தன்.
    நல்லா - நகை - சுவையாக உள்ளது.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  2. //எல்லாம் மாறினாலும்
    உன்னைக்காதலித்த
    என் இதயம் மட்டும் அப்படியே!


    என்ன என்னத்தையோ நேர்ந்துவிடும்
    என் ஆத்தா ஆசையாய்
    கூப்பிட்டும் எங்கள் குலசாமி
    கோவிலுக்கு செல்லாமல்
    என்குலசாமியான உனக்கு
    என்னையே நேர்ந்துவிட்டேன்!
    என் விருப்பத்தினை
    நிறைவேர்த்திடு என் தாயே!//

    ம்ம்ம்...
    அருமை..அருமை.. சார்

    கடித வரிகளில்
    நினைவு துளிகளும்
    நவ மாற்றங்களும்

    பதிலளிநீக்கு
  3. கிளாசிக் தல!

    தல தலதான் :)

    பதிலளிநீக்கு
  4. காதல் கிறுக்கு ரொம்ப முத்திதான் போய்டுச்சு போல.

    பதிலளிநீக்கு
  5. காதல் கவி அருமை! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  6. கவிதையில் வலிதாங்கி வந்து பின் சாமியிடம் முடித்த விதம் அழகு விச்சு! நேர்ந்துவிட்டேன்!ம்ம் அர்த்தம் பொதிந்தவரிகள்§

    பதிலளிநீக்கு
  7. பழைய நினைவையெல்லாம் கிண்டிக் கிளறியெடுத்துக் கவிதையாக்கினமாதிரி இருக்கு.பக்தனைத் தேடி குலதெய்வம் வர நாங்களும் அதே குலதெய்வத்தை வேண்டிக்கிறோம் !

    பதிலளிநீக்கு
  8. காதல் என்னென்ன வரிகளை கொண்டு வருகிறது... அருமை... வாழ்த்துக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  9. ஹா....ஹா..ஹா.... விசு.... ஆஹா விசுவுக்கும் வந்திட்டுதூஊஊஊஊஊஊஉ நான் குலதெய்வப்பக்தியைச் சொன்னேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

    கலக்கிட்டீங்க... உண்மைதானே... இப்படிப் பலரது வாழ்வில் மறக்க முடியாத அனுபவங்கள் இருக்கலாம், ஆனால் விச்சுவுக்குமோ?:)

    பதிலளிநீக்கு
  10. //எல்லாம் மாறினாலும்
    உன்னைக்காதலித்த
    என் இதயம் மட்டும் அப்படியே!//

    சே..சே... இதை நன் நம்பமாட்டேன்ன்ன்... உதெல்லாம் உல்லுல்லாயி:)).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிஜமா இதயம் ஆப்படியேதான் இருக்கு. ஆனா கொஞ்சம் வளர்ந்திருக்கும்னு நினைக்கிறேன்.

      நீக்கு
  11. //நாம் மல்லாக்கப் படுத்து
    நிலவை ரசித்த அந்த
    வைக்கப்போரையும் காணோம்!

    //
    ஆனா நிலவிருக்குதுதானே?:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்று பவுர்ணமினு நினைத்து படுத்தா அமாவாசையாம். என்னவளின் முகத்தை கண்ணாடியில் காண்பித்து நிலாவைப் பார்த்தோம்.

      நீக்கு
    2. நீங்க எங்கேயோ போயிட்டீங்க விச்சு:)..

      நீக்கு
    3. அசத்திட்டீங்க விச்சு !

      நீக்கு
  12. மொத்தத்தில, வேதனையையும் நகைச்சுவையாகச் சொல்லும் கவிதை அழகூஊஊஊஊஊஉ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐ ஒப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்:))) விச்சு இதுக்குப் பதில் தராமல், பதிலெல்லாம் சரியோ எனச் செக் பண்ணுங்க எனச் சொல்லிட்டார்ர்.....

      நீக்கு
  13. #நாம் மல்லாக்கப் படுத்து
    நிலவை ரசித்த அந்த
    வைக்கப்போரையும் காணோம்!#

    அருமை...

    பதிலளிநீக்கு
  14. ஏ,,யப்பா இம்புட்டு ஆசையா,இம்புட்டுப்பிடிப்பா?என சொல்ல வைக்கிற கவிதை.நல்லாயிருக்கு,வாழ்த்துக்கள்/

    பதிலளிநீக்கு
  15. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_12.html) சென்று பார்க்கவும். நன்றி !

    பதிலளிநீக்கு