சனி, மார்ச் 10

மின்சார சிக்கனம்

தமிழகத்தில் இன்று பெரும் பிரச்சினையாக இருப்பது மின்சாரம். சம்சாரத்தைக்கூட ஒருவழியாக சமாளித்துவிடலாம். ஆனால் மின்சாரமில்லாமல் இன்று தமிழகம் படும்பாடு சொல்லிமாளாது.  பெண்கள் இதனையே ஒரு சாக்காக வைத்து பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றினால் தங்கள் உடம்பினை "சிக்"கென வைத்துக்கொள்ளலாம். இதனால் பலவிதமான நோய்களில் இருந்து தங்களைப் பாதுகாக்கவும் உதவும். இதனையே நமக்கு சாதகமாகவும் பயன்படுத்தலாம் (ஆதங்கத்தில்தான்).


1. மின்சாரக் கட்டணம் மிச்சம். எப்படி?


தமிழகம் வாருங்கள்!!
2. தமிழ்நாட்டின் கலாச்சாரத்தினைத் திரும்பவும் மீட்டெடுக்கலாம். அம்மி, உரல், ஆட்டுரல் போன்றவற்றினைப் பயன்படுத்துவதன் மூலம் பெண்கள் தங்கள் உடம்பினை கட்டுக்கோப்பாக வைத்திருக்கலாம். நோய்நொடிகள் நெருங்கவிடாமல் செய்ய இந்த உடற்பயிற்சிகள் உதவும். வேலையும் செய்தமாதிரி ஆச்சு. உடம்பையும் செலவில்லாமல் "சிக்"கென வைத்திருக்கலாம். கிரைண்டர், மிக்ஸி பயன்படுத்தாததால் கரண்ட் பில் மிச்சம்தானே!!!


3. விறகு அடுப்பினைப் பயன்படுத்தலாம்.

4. மண்பானையைப் பயன்படுத்தலாம்.

5. மின்சாரமில்லாமல் வாழப்பழகிக்கொள்வதால் நமக்கு நேரம், செலவு மிச்சம். எப்படியென்றால்... தொலைக்காட்சி பார்ப்பதினை வேறு வழியில்லாமல் தவிர்ப்போம். இதனால் நேரம் மிச்சம். 

6. நாம் கூடிப்பேசுவதற்கு இது உதவும். இதனால் உறவுமுறை வளரும்.

7. தொலைக்காட்சியில் நாடகம் தொடர்ச்சியாகப் பார்ப்பதனால் மனச்சிதைவு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இனி அது தவிர்க்கப்படலாம்.


8. சூரிய ஒளியின் பயனை அறிந்து அதனைப் பயன்படுத்தலாம்.

9. காற்றாலையின் பயனை அறிந்து கொள்ளலாம்.
10. மாணவர்கள் மதிப்பெண் குறைந்தால் பெற்றோரிடம் இதனை ஒரு காரணமாக கூறிக்கொள்ளலாம்.






11.பயன்படுத்தப்படாத பல்புகளைக்கொண்டு அழகான இயற்கை காட்சிகளை உருவாக்கி நமது படைப்பாற்றல் திறனை வளர்த்துக்கொள்ளலாம்.








12. வீட்டு விலங்குகள் வைத்திருப்போர் அதனைப் பயன்படுத்தி பயன்படாத பல்புகளுடன் விளையாடப் பழக்கப்படுத்தலாம்.






 13. இரவில் நிலவின் அழகினை ரசிக்கப் பழகிக் கொள்ளுங்கள். அது உங்கள் மனதுக்கு நல்லது.










14. அந்தக்காலத்தில் நிலாச்சோறு என்று கொண்டாடுவார்கள். அதுபோன்று நாமும் கரண்ட் இல்லாத இரவில் எல்லோரும் அவரவர் வீட்டில் உள்ள உணவினைக் கொண்டு வந்து உண்டு நிலாச்சோறு பழக்கத்தினை புதுப்பிக்கலாம். அண்டை அயலாருடன் நம்து பழக்கம் வளரும்.





இப்படிக்கு...

நன்றி..
     விக்கியின் அகட விகடங்கள்!  மற்றும் கூகுள் தேடலில் கிடைத்த படங்கள்.

டுடே ஜிகே : நமது ஊருக்கு கரண்ட் எப்போது வரும்.
அ) எனக்கு தெரியாது
ஆ) அவனுக்கும் தெரியாது
இ) EB க்கும் தெரியாது
ஈ)யாருக்கும் தெரியாது 

24 கருத்துகள்:

  1. ஹா ஹா ஹா ஒவ்வொரு குறிப்பும் பயனுள்ளது நண்பா! காமெடி + கருத்து = கலக்கல்!!

    பதிலளிநீக்கு
  2. ஐயோ சுப்பர் டிப்ஸ்....

    பதிலளிநீக்கு
  3. படங்களுடன் பதிவும் அருமை
    குறிப்பாக முதல்வர் மெழுகு வெளிச்சத்தில்....
    மன்ம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. கருத்துக்கள் கலக்கல் ! படங்கள் சூப்பர் ! வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  5. ம்ம்....எல்லாமே நல்ல விஷயம்தான்.சிரிப்பாவும் இருக்கு.சங்கடமாவும் இருக்கு விச்சு !

    பதிலளிநீக்கு
  6. ஹா ஹா ஹா அருமை நண்பா..
    நன்றாகச் சொன்னீர்கள்

    பதிலளிநீக்கு
  7. கரண்ட் கட்னால இவ்வளவு நன்மைகள் இருக்கா? நம்ம எல்லார் மேலயும் அம்மாக்கு எவ்வளவு கரிசனம். இதுப்புரியாம நானும் அம்மாவை திட்டிப்புட்டேனே. சாரி சொன்னேன்னு அம்மாக்கிட்ட சொல்லிடுங்கண்ணா

    பதிலளிநீக்கு
  8. ரவில் நிலவின் அழகினை ரசிக்கப் பழகிக் கொள்ளுங்கள். அது உங்கள் மனதுக்கு நல்லது.


    எல்லாம் நன்மைக்கே!

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா12 மார்ச், 2012

    ஒவ்வொரு குறிப்பும் பயனுள்ளது நண்பா....

    பதிலளிநீக்கு
  10. எல்லாம் சரிதான்,யார் இதை செய்வது,கண்முன்னால் கண்ட உண்மை இது.ஒரு வருடத்திற்கு முன்னால் எனது சொந்த கிராமத்திற்கு சென்றிருந்த சமயம் துவரை பயிரை களத்தில் போட்டு அடித்து முடித்திருந்தார்கள்.பயிரை அடித்து முடித்ததும் அந்தச்செடியை அடுப்பெரிக்க கொண்டு செல்வது வழக்கம்.ஆனால் அப்படி செய்யாமல் அங்கயே போட்டு எரித்து விட்டார்கள்,இருவர் இருவரல்ல இப்படி செய்தது.கிட்டத்தட்ட 50,60 பேராவது இப்படிசெய்திருப்பார்கள்.இப்படி இருக்க ஆட்டுக்கல்,அம்மிக்கல் எல்லாம்,,,,,,,?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன செய்வது காலம் கிராம மக்களையும் மாற்றிவிட்டது.

      நீக்கு
  11. அதெல்லாம் சரிதான்.ஆண்களுக்கும் டிப்ஸ் கொடுங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெல்லாம் ஆண்கள் ஏற்கனவே செய்வதுதானே.

      நீக்கு
  12. சிந்தனையும் பதிவிட்ட அழகும் அருமை .

    பதிலளிநீக்கு
  13. நீங்கள் என்னை வலைச்சரத்தில் அற்முகப்படுத்தியதை இன்று தான் பார்த்தேன் நன்றி..தாமதத்திற்கு வருந்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  14. படங்கள் சூப்பர். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு