திங்கள், ஏப்ரல் 1

காதலின்பின் மெளனம்



           நடந்துசெல்லும் பாதையில் கையில் கிடைக்கும் மரத்தின் இலைகளை பறிக்கும்போது அதற்கு வலிக்கும் என்று உணர்ந்திருக்கிறீர்களா!
காலில் எறும்புகள் மிதிபடும் என்பதை நாம் ஒருபோதும் யோசிப்பதில்லை..  அதற்கு நேரமும் இல்லை. இயல்பாய் இருப்பவனுக்கே இந்த நிலமை என்றால்.... காதலித்துப்பார் உலகத்தில் நீங்கள் மட்டுமே இருப்பதாய் உணர்வாய். உலகம் மறக்கும். சுற்றம் மறக்கும்.

காதலி
சரியென்று சொன்னால்
புல்லின் நிழலில் கூட
ஓய்வெடுக்கலாம்
எறும்புகளுடன்
ஓட்டப்பந்தயத்தில்
கலந்துகொள்ளலாம்..!


எதிர்வரும் மனிதர்கள் எந்த நிறத்தில் நம்முடன் பழகுகிறார்கள் என்பதை நம்மால் எளிதில் உணரமுடியாது. மனசுக்கு நிறமுண்டு. ஆனால் அந்த  நிறம் அவனுக்கு மட்டுமே தெரியும்.

காதலி
மனசின் நிறத்தை
கண்ஜாடையில்
உணர்ந்துகொள்வான்
காதலன்..!


உலகம் எளியோர்களை எப்போதும் மதித்ததில்லை. தினமும் கோடானகோடி உயிர்கள் இறக்கின்றன. அத்தனையும் நமக்கு செய்திதான். நம்முடைய உறவினர் ஒருத்தர் யாரேனும் இறந்துவிட்டால் துக்கம் தாளாமல் அழுகிறோம்.

காதலி
மனசும் இறக்கிறது
நிராகரிக்கப்பட்ட
காதலால்..!


கோபங்கள் மனசை காயப்படுத்தும். கோபத்தில் வரும் வார்த்தைகளுக்கு முகம் கிடையாது. அது யாரையும் பார்க்காது. அதன் கடிவாளம் நம்மிடம் உள்ளவரை கோபம் நம்வசப்படும். காதலிலும் வரும் கோவம் வார்த்தைகளை வரவிடாது. அது மெளனக்கோபம்...

பறவைகள்
கிளைகளை நம்புவதில்லையாம்
நானும் உன்னை நம்பவில்லை
உன் மனதை மட்டுமே..!


காதலில் காதலியை  மட்டுமே அங்குலம் அங்குலமாய் தெரியும். காதலில் தோற்றுப்பார் உலகமும், வாழ்வும் புரியும். வலி என்பதன் அர்த்தமும் புரியும். மெளனத்தில் உள்ள அர்த்தம் புரியும். 


வார்த்தையை கொல்வதும்
மெளனம்
உன்னை கொல்வதும்
மெளனம்தான்
மெளனம் அழகானது
பிரிதொருமுறை
பேசுவாய் எனும்வரையில்
மெளனம் சித்திரவதையானது
பேசவேமாட்டாய் எனும்போது
நானும் மெளனிக்கிறேன்.. !

8 கருத்துகள்:

  1. அனைத்தும் அருமை...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. மிக மிக அருமை
    படித்து மிகவும் ரசித்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. நண்பரே அருமையான பதிவு, மேலும் ஒரு தகவல் . கூகுளே அட்சென்ஸ் போல. தமிழ் தளங்களுக்கு விளம்பரம் தருகிறார்கள். உங்கள் தளத்தையும் பதிவு செய்து பயன் பெறுங்கள். http://www.taxads.in/

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா13 ஏப்ரல், 2013

    சகல நலங்களும், மகிழ்வும் நிறைய
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.




    பதிலளிநீக்கு
  5. மெளனம் அழகானது.நல்லப் பகிர்வு

    பதிலளிநீக்கு
  6. மௌள்னமே ஒரு சிறந்த பாஷைதானே?

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா05 ஜூலை, 2013

    An impressive share! I've just forwarded this onto a friend who has been doing a little research on this. And he actually ordered me breakfast simply because I stumbled upon it for him... lol. So let me reword this.... Thank YOU for the meal!! But yeah, thanx for spending the time to talk about this subject here on your blog.

    Also visit my blog post :: garcinia cambogia side effects and benefits

    பதிலளிநீக்கு
  8. மனசும் இறக்கிறது
    நிராகரிக்கப்பட்ட காதலால்

    காதல் இறக்கவில்லை
    அவள் மரணிக்கும் வரை

    பதிலளிநீக்கு