வெள்ளி, டிசம்பர் 9

பிஞ்சுவிரலின் பென்சிலோவியம்

நீ வரையும் 
ஓவியத்தின் வடிவம்...

அப்போது பெய்த 
மழையில் கரையும் 
செம்மண் புழுதியைப்
பார்த்து வரைந்ததா?

ஒரு வாழ்ந்து
மக்கிப்போன பரம
ஏழையின் மண்குடிசையைப்
பார்த்து வரைந்ததா?

தன் வாழ்நாளினை
முடித்து உதிரும் 
பழுத்த இலையினைப்
பார்த்து வரைந்ததா?

தன் அனுபவங்களை
ரேகைகளாக முகத்தில்
கொண்டிருக்கும் முதியவனைப்
பார்த்து வரைந்ததா?

அப்போது கூடிய
வேகமாக நகரும்
மழைமேகங்களின் 
கரிய வண்ணங்களைப் 
பார்த்து வரைந்ததா?

உன் சட்டையில்
கிறுக்கியிருக்கும்
கிறுக்கல்களைப்
பார்த்து வரைந்ததா?

இது அர்த்தமுள்ள
ஓவியமா?
உன் எண்ணத்தின்
வண்ணக்குமுறலா?

எதுஎப்படியாயினும்
நீ வரைந்த ஓவியத்தின்
உள்ளர்த்தம் என்னறிவுக்கு
எட்டவில்லை!

இப்போதிருந்தால் உன்னிடம் 
ஓவியம் கற்றுக்கொள்ள
பிகாசோவும் ரவிவர்மாவும்
நேரம் கேட்டு
காத்துக்கொண்டிருப்பார்கள்!




21 கருத்துகள்:

  1. //இப்போதிருந்தால் உன்னிடம்
    ஓவியம் கற்றுக்கொள்ள
    பிகாசோவும் ரவிவர்மாவும்
    நேரம் கேட்டு
    காத்துக்கொண்டிருப்பார்கள்!//

    உண்மை நண்பரே..நானும் கூட என் மகள் வரையும் ஓவியமே சிறந்ததது என்பேன்

    வரிகள் அருமை

    பதிலளிநீக்கு
  2. ஓவியமே ஓவியம் வரைகிறதா?ஆ,,,அதன் அழகே தனிதானே?

    பதிலளிநீக்கு
  3. ரசிப்புத் தன்மை உங்களிடம் நிறைய உள்ளது! அழகான கவிதை. அழகான படம். பகிர்விற்கு நன்றி நண்பரே!
    நம்ம தளத்தில்:
    "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

    பதிலளிநீக்கு
  4. பிஞ்சுவிரலின் ஓவியம் மகிழ்வூட்டிப் போகிறது என்றால்
    அது குறித்த தங்கள் சிந்தனையின் விரிவு மலைப்பூட்டிப் போகிறது
    அருமையான மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 2

    பதிலளிநீக்கு
  5. உலகிலேயே இணையற்ற ஓவியர்களைப் பற்றி ஒரு கவிதை.என் ஓவியங்கள் இன்னும் அப்பாவிடம் பாதுகாக்க்கப்படுகின்றன.அருமையான சிந்தனையும் வரிகளும்.பாராட்டுக்கள் விச்சு !

    பதிலளிநீக்கு
  6. உண்மை தோழர், இன்னும் அவர்களிடம் வாட்டர் கலர் வாங்கி கொடுத்து பாருங்கள்... கலக்குவார்கள்...

    பதிலளிநீக்கு
  7. விச்சு, இப்பொழுதுதான் உங்கள் தளத்தினுள் எட்டிப் பார்க்கிறேன்.

    ஒரு கிறுக்கலை வைத்து இவ்வளவு அழகாக கற்பனை பண்ணி, கவிதையாக வடித்திருக்கிறீங்க... உங்கள் கவிதையாலே, அவ் ஓவியம் கண்களுக்கு கிறுக்கலாகத் தெரியவில்லை, உயிர்ப்பெற்றுத் தெரிகிறது.... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆதிரா.

    பதிலளிநீக்கு
  9. நன்றி...எனது பதிவை த.ம தில் இணைத்தர்க்கு...உங்கள் வலைதளம் மிக அருமையாக உள்ளது...

    பதிலளிநீக்கு
  10. Jayaram, Jayapriya, சி.பி.செந்தில்குமார் அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. nice kavithai... thanks to share .. please read my tamil kavithaigal in www.rishvan.com

    பதிலளிநீக்கு
  12. இப்போதிருந்தால் உன்னிடம்
    ஓவியம் கற்றுக்கொள்ள
    பிகாசோவும் ரவிவர்மாவும்
    நேரம் கேட்டு
    காத்துக்கொண்டிருப்பார்கள்!
    >>>
    நிஜம் தான் சகோ. அப்பிடியே எங்க வீட்டு சுவத்திலயும் வந்து கத்துக்கிட்டு போக சொல்லுங்க

    பதிலளிநீக்கு
  13. எல்லோர் வீட்டிலேயும் இதே நிலைமைதானா? அவர்களின் கிறுக்கலில் சுவரின் அழகு கூடுகிறது. நன்றி ராஜி.

    பதிலளிநீக்கு
  14. புரியாத புதிராய் நம் புரிதலுக்கு எட்டாத அந்த கிறுக்கல்களில் எத்தனை அர்த்தங்கள் ஒளிந்திருக்கும்!
    அருமையான பதிவு!

    பதிலளிநீக்கு
  15. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி யுவராணி தமிழரசன்.

    பதிலளிநீக்கு
  16. அருமை. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  17. பெயரில்லா14 பிப்ரவரி, 2012

    நண்பா! இன்று காலையில் நீ சொன்ன பிறகுதான் உனது வலைப்பூவில் தடம்பதிக்கிறேன். நன்றாக இருக்கிறது. தொடரட்டும் உனது கலைச்சேவை(!)...

    ரமேஷ்

    பதிலளிநீக்கு