வெள்ளி, பிப்ரவரி 17

விருது

        என் எழுத்தினை யாரும் கவனிப்பார்களா? என்ற சந்தேகத்துடன் நான் பதிவுலகில் காலடி(கையாலதான் டைப் பண்றோம்) எடுத்துவைத்து சில மாதங்களில் கிடைத்த அங்கீகாரம் இரண்டு விருதுகள். யுவராணி தமிழரசன் எனக்கு வழங்கிய "`Versatile Blogger Award ". மனமகிழ்வுடன் இதனை ஏற்கிறேன் (விருது கிடைச்சா வேண்டாம்னா சொல்வோம்). எனது பதிவிற்காக அவர் வழங்கிய இந்த விருதுக்கு எனது நன்றி.


பிடித்த ஏழு விசயங்கள் சொல்ல வேண்டுமாதலால் எனக்குப் பிடித்தவை :

* புத்தகம் வாசிப்பது
* அம்மாவின் அன்பு
* எனது மனைவியுடன் ஊர் சுற்றுவது
*  நண்பர்களுடன் சேர்ந்து இருப்பது
* குழந்தைகளுடன் பழகுவது
* இயற்கையையும் ரம்மியமான இசையையும் ரசிப்பது
* கமல்ஹாசனின் படங்கள் பார்ப்பது

பகிர விரும்பும் ஐந்து பதிவர்கள் :

1.கவிதைகளை அற்புதமாக எழுதும் சசிகலாவிற்கு.
2.அழகான படைப்புகளைத் தரும் கௌசல்யாவிற்கு.
3. நல்ல கட்டுரைகளையும் எங்கள் ஊரைச்சுற்றியுள்ள தளங்களையும் எழுதும் ரத்னவேல் ஐயாவிற்கு.
4.சிறப்பான பத்வுகளைத் தரும் விமலன் அவர்களுக்கு
5.நல்ல படைப்புகளைதரும் மணிமேகலாவிற்கும் வழங்குகிறேன்.




     மற்றொரு விருதான சகோதரி ராஜி வழங்கிய லீப்ச்டர் என்கிற இளம் வலைப் பதிவாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஜெர்மானிய விருது.இதன் அர்த்தம் 'மிகவும் பிடித்த' என்பதாகும்.இதைப் பெறுபவர்,மேலும் தான் விரும்பும் ஐந்து இளம் வலைப்பூக்களுக்கு அதாவது 200 உறுப்பினர்களுக்கு குறைவாக உள்ள வலைப்பூக்களுக்கு விருது வழங்க வேண்டும்.


1.கவிதைகள், சிறுகதை, படித்ததில் பிடித்தது எனப்பண்முகம் காட்டும் நிலாமகள்
2.புரட்சிகரமாகவும் உண்மை நிலையையும் உரைக்கும்   இருதயம் அவர்களுக்கும்.
3.கவிதை வடிவில் திருக்குறள் எழுதும் ரிஷ்வன் அவர்களுக்கும்
4.திருக்குறளில் காதல் கொண்டுள்ள வியபதிக்கும்
5. இந்தாண்டு முதல் எழுதும் திவ்யா @ தேன்மொழி அவர்களுக்கும் இதனை வழங்கி மனமகிழ்ச்சி கொள்கிறேன்.
      
    இதை தாங்கள் ஏற்றுக் கொண்டதன் அடையாளமாக இதன் படத்தை தங்கள் தளத்தில் காப்பி - பேஸ்ட் செய்து கொள்ளவும்.தாங்களும் இந்த விருதினை உங்கள் மனம் கவர்ந்த ஐந்து பதிவர்களுக்கு பகிர்ந்து உற்சாகப்படுத்துங்கள்.

19 கருத்துகள்:

  1. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி . பகிர்ந்து கொடுத்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  2. மனமார்ந்த வாழ்த்துக்கள்..!

    பதிலளிநீக்கு
  3. தங்கள் விருதுக்கு மகிழ்ச்சி.
    மிக்க நன்றி.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. மனமார்ந்த வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
  5. இனி..தொடரட்டும் தங்கள் தேடல்....விதைத்தல்...

    பதிலளிநீக்கு
  6. ம‌கிழ்வும் ந‌ன்றியும் தோழ‌ர்! எங்க‌ வீட்டு க‌ணினி தொழில்நுட்ப‌ வ‌ல்லுந‌ர் வெளி மாநில‌த்தில் ப‌டித்துக் கொண்டிருப்ப‌தால், தேர்வு முடிந்து விடுமுறையில் வ‌ந்த‌தும் த‌ங்க‌ள் வ‌லைத‌ள‌த்திலிருந்து விருதை ப‌டியெடுத்து ஏற்றிக் கொள்கிறேன்.

    த‌ங்க‌ளால் தேர்ந்தெடுக்க‌ப் ப‌ட்ட‌ அனைத்து ப‌திவ‌ர்க‌ளுக்கும் அன்பான‌ வாழ்த்துக‌ள்!

    பதிலளிநீக்கு
  7. ஏழு ஸ்வ‌ர‌ங்க‌ள் போல் நிறைவாய் இருக்கிற‌து த‌ங்க‌ளுக்குப் பிடித்த‌ ஏழு விஷ‌ய‌ங்க‌ளும்!

    பதிலளிநீக்கு
  8. நண்பருக்கு வணக்கம் ,

    என்னை நீங்கள் அளவில்லாமல் கௌரவித்து விட்டர்கள் . தங்கள் விருது என்னை மேலும் எழுத தூண்டுகிறது . எனது மனமார்ந்த நன்றியை உங்களுக்கு சமர்பிக்கிறேன் ...

    நன்றி ....! நன்றி

    பதிலளிநீக்கு
  9. தங்கள் விருதுக்கு மகிழ்ச்சி.
    மிக்க நன்றி.
    வாழ்த்துகள்... www.rishvan.com

    பதிலளிநீக்கு
  10. விருதைபகிர்ந்து கொண்டதற்கு நன்றி.மேலும் இதுபோன்ற பலவிருதுகள் பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. உங்கள் பிடித்த விஷயங்கள் உங்களையே காட்டிக் கொடுக்கிறது விச்சு.இன்னும் விருதுகள் பெற அன்பு வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  12. விச்சு,

    என்ன ஒரு இனிய மகிழ்வான எதிர்பாராத விருது!!

    மிக்க மகிழ்ச்சி.ஈழ முற்றம் ஒரு கூட்டுப் பதிவு. அவ் விருதினை அவர்கள் எல்லோரோடும் சேர்ந்து மிக்க மகிழ்வோடு பெற்றுக் கொள்கிறேன்.

    மேன்மேலும் உங்களுக்கு விருதுகளும் சந்தோஷங்களும் வந்தடைய வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  14. இரு விருதுகள் பெற்றதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..!


    தாங்கள் எனக்குவிருதுஅளித்து கௌவித்தமைக்கு மகிழ்ச்சி.
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  15. ஸலாம் சகோ.விச்சு,
    மிகிழ்ச்சி. விருது பெற்றமைக்கு வாழ்த்துகள் சகோ. அப்புறம்...
    ஒருத்தர் வாங்கி அதை ஐந்து பேருக்கு பகிர்ந்தால்...
    ஹி..ஹி..கூடிய சீக்கிரம் அனைத்து வலைத்தளங்களையும் இவ்விருது அலங்கரிக்கக்கூடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். நன்றி முஹம்மது ஆஷிக்.

      நீக்கு
  16. வணக்கம் சகோ,
    நல்லதோர் அங்கீகாரத்தினை உங்கள் எழுத்துக்கள் உங்களுக்கு தேடித் தந்திருக்கிறது.
    விருதினைப் பெற்றுக் கொண்ட உங்களுக்கும், உங்களிடமிருந்து விருதினைப் பெறும் அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் தோழரே..! வெகு நாட்களுக்குப் பின் கூட்டினுள் எட்டிப்பார்த்த எனக்கு, தேன் நிறைந்த விருதுக் கோப்பை காத்திருந்ததில் பெரும் மகிழ்ச்சி..! மிக்க நன்றி.. விருது பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..!

    பதிலளிநீக்கு