புதன், நவம்பர் 21

தா...வரம்


நான் இல்லையென்றால் பூமியில்
காற்றும் இல்லை
எனக்கும் கர்வம்தான்
நான் இல்லையென்றால்
பெட்ரோல்... நிலக்கரி
எதுவுமில்லை
கர்வம்தான்

நான் இல்லையென்றால் எந்த 
உயிரினமும் உலகிலில்லை
கர்வம்தான்
நான் இல்லையென்றால் பூமியின்
வெப்பம்கூடி சுடுகாடாயிருக்கும்
கர்வம்தான்
மனிதனின் மானமும் காப்பேன்
உயிரையும் காப்பேன்
கர்வம்தான்
உலகில் உயரமானவனும்
நான்தான்
கர்வம்தான்


பரந்துவிரிந்து சிறகடிக்கும்
என்னை மனிதன் ஒருவன் 
ஜட்டிக்குள்ள
குட்டிபோட வைத்தான்
அவனுக்கு இது கர்வம்தான்...!!!
எனக்கும்  தா... ஒரு வரம்!!
நானும் அவனை வளர்க்கவேண்டும்
என் ஜட்டிக்குள்...!!!



வியாழன், நவம்பர் 8

ஒரு டவுட்!

வரவர நானும் அறிவாளியாகிக்கிட்டே இருக்கேன். ஒரு டவுட்டுனு  சொல்லிட்டு நிறைய கேட்டிருக்கேன்.

ஒருதலைக்காதல்
 இருவரும் காதலிச்சால்தானே அது காதல். அப்படித்தானே! அப்போ... ஒருதலைநினைப்பு!

சனி, நவம்பர் 3

படிப்பு

         படிப்பு என்றால் என்ன? மனிதனை உருவாக்குவதே படிப்பு. அப்போ! படிக்காதவனெல்லாம் மனிதனில்லையா? பக்குவப்பட்ட, அறிவுடைய, சிந்திக்கும் திறனுடைய ஒருவனை உருவாக்குவதே கல்வி. உலகைப்பற்றி அறியவும் பலதரப்பட்ட சம்பவங்களை தெரிந்து கொள்ளவும்தான் படிப்பு உதவும்.
          அந்த படிப்பை ஒருவன் வாழ்க்கையில் எப்படி பயன்படுத்துகிறனோ அவனே வெற்றியடைகிறான். என்னுடன் படித்தவர்களில் பல மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுத்தனர். அதில் இன்னும் சிலர் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைமையை அடைய முடியாமல் தவிக்கின்றனர். ஆனால் சராசரி மதிப்பெண் எடுத்த பலர் வாழ்க்கையில் ஒரு நல்ல அல்லது வெற்றிகரமான நிலைமையை அடைந்துள்ளனர். ஏனெனில் நன்றாக படிக்கும் பலர் புத்தக அறிவு மட்டுமே போதும் என்றிருந்துவிட்டனர். அதற்குமேல் வாழ்க்கைக்கல்வி என்ற ஒரு விசயம் இருப்பதை மறந்தும் விட்டனர்.