புதன், மே 16

நடுவர் முருகனின் பட்டாசு பேச்சு

உழைப்பின் முக்கியத்துவத்தையும் படிப்பின் அவசியத்தையும் வலியுறுத்தும் மதிப்பிற்குரிய தேனி P.முருகன் அவர்களின் அற்புதமான படபட பட்டாசு பேச்சு. எந்தப் பொருளையும் உருவாக்குபவன் விலையை அவனே நிர்ணயம் செய்கிறான். ஆனால் ஒரு விவசாயி உற்பத்தி செய்யும் பொருட்கள் மட்டும் அவனால் விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை.வேலைக்குப் போகும் தாய் தன் குழந்தையைக் கூட கவனிக்காமல் தன் நேரத்தினை உழைப்பிற்காக அர்ப்பணிக்கிறாள். உழைப்பாளிகள் நமது நாட்டில் சுரண்டப்படுகிறார்கள்.