செவ்வாய், ஆகஸ்ட் 19

கூச்சம்

                

              கூச்சம் எல்லோருக்கும் பொதுவானது. தோல், பாதம், உள்ளங்கை போன்றவற்றில் தொடு உணர்வு செல்கள் அதிகம் உள்ளன. இதில் அவற்றின் மேற்போர்வை இல்லை. அதனால் குறைந்தபட்ச தூண்டல்களையும் துல்லியமாகக் கடத்தும் திறன் பெற்றுள்ளன. காதலியின் இடுப்பு, கன்னம், பாதம், உள்ளங்கையை வருடுவது சுகமான அனுபவம்தான். இந்தக்கூச்ச உணர்வு மனிதர்களுக்கு இல்லையென்றால் சந்தோஷம் என்று ஒன்று காணாமல் போயிருக்கும். எல்லோருமே மரத்துப்போய் அலைவார்கள்.  குழந்தைகளுக்கு இந்த கூச்ச உணர்வு சற்று அதிகமாக இருக்கும். 

                                        இதைப்பற்றிய 1996ல் வெரியர் எல்வின் எழுதிய உலகம் குழந்தையாக இருந்தபோது என்ற நூலில் ஒரிஸாவைச் சேர்ந்த கொண்டர் இனமக்கள் கூறிய கதை இது. ஆதி காலத்தில் குஷி உண்டாக்கும் கூச்ச உணர்ச்சி மக்களிடம் இல்லாத போது அவர்கள் ஒழுக்கத்துடன் இருந்தனர். சேர்ந்து உட்கார்ந்து, பொறுப்புணர்ச்சியுடன் தத்தம் கடமைகள் பற்றியும், தம் பயிர் விளைச்சல் பற்றியும் பேசினர். இப்போதுபோல அர்த்தமற்ற சிரிப்போ, தேவையற்ற வேலையோ எதுவுமில்லை.

              நிரந்தலா எனும் தேவதைக்கு இது அலுப்பாக இருந்ததாம். இநதச் சாரமற்ற வாழ்க்கையை சற்றே மாற்றி, வாழ்வில் வண்ணம் சேர்க்க நினைத்தது. காட்டுக்கு போய் மெழுகு எடுத்து, கூச்ச உணர்ச்சியை வெளிப்படுத்தும் உயிர் வண்டு ஒன்றை உருவாக்கியது.ஆம்,  குழந்தைகளின் வயிற்றுக்குள் இந்த வண்டைச்செலுத்தியது. “உள்ளே போனது மோவாய் அடியில், அக்குள், விலா அருகில் வசித்து வா, யாராவது தொட்டால் உள்ளே ஓடு, அவர்களுக்கு கூச்சமும், சிரிப்பும் வரும் என்று தேவதை கூறியதாம். வண்டும் அவ்வாறே செய்தது.

                 எட்டு நாட்கள் கழித்து வண்டு நுழையப்பெற்ற ஆண், பெண்களைக்காணச்சென்றது. பொறுப்புணர்ச்சி மறைந்து எங்கும் காதல் வாழ்வும், சிரிப்பும் நிறைந்திருந்தது. ஒரு பெண்ணின் இடுப்பைத்தொட பெண் சிரித்துக்குலுங்கினாள்.

                இந்த அர்த்தமற்ற சிரிப்பும், கூச்சமும் இப்படித்தான் தொடங்கினவாம். நிரந்தலா தேவதை இல்லையென்றால் காதலியை எங்கே தொட்டாலும் கூச்சமிருக்காது. எரிச்சல்தான் படுவாள். வாழ்க நிரந்தலா... வாழ்க..வாழ்க...