செவ்வாய், மார்ச் 20

நிர்வாணமான ஊர்

        இதுக்கு மேலேயும் நான் உயிர் வாழ என்ன தகுதி உள்ளது. நான் இனிமேல் வாழ்ந்து என்ன பிரயோசனம். தன்னை நினைத்து தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும் அம்மாவினை நினைத்ததும் வழக்கம்போல கண்ணீர் தழும்பியது. கண்ணீரைத் துடைத்தாள். விரல்களில் கண்ணுக்கு கீழிருக்கும் தழும்பின் ஸ்பரிசம் பட்டது. சொரசொரப்பான கன்னத்தினை நினைத்ததும் அவமானமும் அழுகையும் பொத்துக் கொண்டு ஒருசேர பீறிட்டது.