வியாழன், மார்ச் 15

ஆசிரியர் தகுதித் தேர்வு(TET)

       நமது நாட்டில் அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்விச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் 1 முதல் 8 வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்தது. CTET (Central Teacher Eligibility Test)என்ற தேர்வினை மத்திய செகண்டரி கல்வி போர்டு நடத்தி வருகிறது. இதில் நவோதயா, கேந்திரிய வித்யாலயா, மத்திய அரசுப்பள்ளிகளில் சேர விரும்பும் ஆசிரியர்கள் எழுத வேண்டும். தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் TET(Teacher Eligibility Test) என்ற தேர்வினை நடத்த திட்டமிட்டு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.