சனி, ஜனவரி 14

சேமியா,மைதா,சவ்வரிசி எதிலிருந்து?

       சில பொதுவான விசயங்கள் நமக்குத் தெரியாமலோ அல்லது மறந்துபோயோ இருக்கலாம். அதில் சில விசயங்களின் ஞாபகமூட்டல் இப்பதிவு. 

சேமியாவானது மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கேழ்வரகிலிருந்தும் சேமியா தயாரிக்கப்படுகிறது. 

நரி

          நம் மனதைப்பற்றிய கலீல் ஜிப்ரானின்   நரி என்றொரு கதையில்... காலையில் தன்னுடைய நிழல் நீண்டு இருப்பதைப் பார்த்து நரி சொன்னது :   "எனக்கு  இன்று  காலை  உணவுக்கு  ஒரு  யானை  கிடைக்க வேண்டும்.' 
         யானையைத்தேடி  மதியம்  வரை அ து அலைந்து  திரிந்தது. ஆனால், மதியம்  தன்  நிழலைப்பார்த்து  நரி  சொன்னது : " எனக்கு ஒரு  எலி  கிடைத்தால் கூட போதும்!'.
      நம்முடைய  மனமும்  இப்படித்தான்.  நமது பலமும்,  பலவீனமும்  ஒரே சமயத்தில்  மனதில்  இடம்பெற  முடியாது. ஒவ்வொரு   சமயத்திலும் ஒவ்வொரு  விதமாக  அவை  வெளிப்படுகிறது.