ஞாயிறு, செப்டம்பர் 25

இந்தப் புதிருக்கு பதில் சொல்லுங்க பிளீஸ்...

           இது அவ்வளவு பெரிய புதிர் இல்ல. உங்களுக்கு இது சாதாரணம். ஒரு நிகழ்ச்சியை சொல்றேன். பொறுமையா கேளுங்க. அப்புறமா இதுலயிருந்து ஒரே ஒரு கேள்வி.  பதிலை சொல்லிருங்க. 

             இராஜபாளையம் பஸ்டாண்டில் ஒரு சிவப்பு கலர் பஸ் நிக்குது. அப்போ 'சோ'னு மழை பெய்யுது.பஸ்ஸுக்குள்ள 4 வயதான பெண்கள், 6 ஆம்பிளைங்க, 6 காலேஜ் படிக்கிற வயசுப்பெண்கள், 3 குழந்தைகள் மற்றும் 2 வியாபாரிகள்   இருக்காங்க. இப்போ நீங்க அந்த சிவப்பு கலர் பஸ்ஸ எடுத்துட்டு போறீங்க. இடி இடிக்குது..மின்னல் வெட்டுது...இருந்தாலும் பஸ் மதுரைக்கு கிளம்பி போகுது. அடுத்த ஸ்டாப் திருவில்லிபுத்தூர். அங்க 5 வக்கீல்கள், 8 மாணவிகள் பஸ்சில ஏறிட்டாங்க. அடுத்து பஸ் கல்லுப்பட்டிக்கு வருது. அங்க 4 வயதான பெண்கள், 2 வக்கீல்கள்,  இறங்கிட்டாங்க. அடுத்து பஸ் திருமங்கலம் வருது. அங்க 4 மாணவிகள் இறங்கிட்டாங்க. 2 போலீஸ் மற்றும்  9 வியாபாரிகள் ஏறிட்டாங்க. இப்போ பஸ் பாண்டி கோவில்ல நிக்குது. 2 போலீஸ் மற்றும் 5 வியாபாரிகள் இறங்கிட்டாங்க. அடுத்து பஸ் மாட்டுத்தாவணி பஸ்டாண்டிற்கு போயிடுச்சு.
            இப்போ கேள்வி:  பஸ்ஸை ஓட்டும் டிரைவர் பெயர் என்ன? தெரிஞ்சா பதிலை கருத்துல பதிஞ்சிடுங்க... இல்லைனா 3 நாள் கழிச்சு இதே பதிவுல போட்டுறேன்.. இது என்ன ஜீஜீபி'னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது...

5 கருத்துகள்:

  1. அவர் பெயர் மாரிமுத்து , ஏன , எங்கள நம்பர கூட்ட வச்சு ஓட்டுநீன்களே...

    ஆண்களே ,பெண்களே : நீங்கள் "அந்த" விசயத்தில் கில்லாடி ஆகணுமா?

    பதிலளிநீக்கு
  2. ஆமா அந்த டிரைவர் பெயர் விச்சு...

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா26 செப்டம்பர், 2011

    //இப்போ நீங்க அந்த சிவப்பு கலர் பஸ்ஸ எடுத்துட்டு போறீங்க//

    பதிலளிநீக்கு
  4. பதில் : நண்பர்களே! நிறைய நண்பர்கள் பதிலைக் கண்டுபிடிச்சு இருப்பீங்க. சரி பதிலைச் சொல்லிடுரேன். நீங்க பஸ்ஸ எடுத்துகிட்டுப் போறீங்க'னு சொன்னதால உங்க பெயர்தான் பஸ் டிரைவர் பெயர்!!!!

    பதிலளிநீக்கு