ஞாயிறு, ஆகஸ்ட் 19

காகித கப்பல்

அலையல்ல சுனாமி

அழகழகான 
கப்பல்  செய்து 
விட்டுகொண்டுதான்
இருந்தேன்
நீயும் ரசிக்கிறாய்
என நினைத்து...
அடிப்பாவி! 
விட்டது கப்பலை அல்ல
என் கவிதையை!
-------------------------------------------------------

நீயும் நானும் 
ஒன்றுதான்
நீ மிதக்கிறாய்
தண்ணீரில்
நான் மிதக்கிறேன்
கண்ணீரில்
-------------------------------------------------------

வெற்றுக்காகிதமான நீ
அவள் கைபட்டபின்
கப்பலானாய்!
வெற்றுமனிதனான நான்
அவள் பார்த்தபின்
கவிஞனானேன்!
------------------------------------------------------

நாமிருவரும்
ஒன்றுதான்...
நினைவுகளைச்
சுமந்து பயணிக்கும் 
காகிதக்குப்பை!
-------------------------------------------------------

நான் செய்த

காகித கப்பல் 
அழகுதான்
விட்ட இடம்தான்
காட்டாறு!
-------------------------------------------------------

13 கருத்துகள்:

  1. பெயரில்லா19 ஆகஸ்ட், 2012

    '',,,காகித கப்பல்
    அழகுதான்
    விட்ட இடம்தான்
    காட்டாறு!...''
    Oh! sad!...try next time.....
    Best wishes.
    Vetha. Elangathilakam.

    பதிலளிநீக்கு
  2. காகித கப்பல்
    அழகுதான்
    விட்ட இடம்தான்
    காட்டாறு!
    -------------------------------------

    அருமை அருமை
    மன்ம் கவர்ந்த அருமையான வரிகள்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. ஆஹா. அருமை.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. முதலாவது கடைசி எல்லாமே அழகு விச்சு !

    பதிலளிநீக்கு
  5. அசத்திட்டீங்க...

    வரிகள் அனைத்தும் அருமை...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

    பதிலளிநீக்கு
  6. கப்பல்கவிதைகள் அருமை! நன்றி!

    இன்று என் தளத்தில்
    அஞ்சு ரூபாய் சைக்கிள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_20.html

    பதிலளிநீக்கு
  7. ஆஆஆஆஆஆஆஆ விச்சுவுக்கு என்னமோ ஆகிப் போச்சூ:) இனி இப்பூடியே விட்டால், ஸ்கூல் பிள்ளைகளின் நிலைமை என்னாவது?:)

    பதிலளிநீக்கு
  8. கப்பல் கட்டும்தளங்களாக நம் மனது இருக்கிற வரை காகிதம் என்ன எதிலும் கப்பல் செய்யலாம்.கவிழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.கப்பல் ஒரு உருவகமாய்,காதல் ஒரு பாடு பொருளாய்,நன்றாகயிருக்கிறது கவிதை வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. விச்சு....காதல் கிறுக்கல்கள் அருமைதான்.....

    பதிலளிநீக்கு
  10. ஆஆஆஆஆஆஆ விச்சுவைக் காணவில்லை, கண்டு பிடித்துக் கொடுப்போருக்கு... ஒரு “box~ இலவசம்:).. உள்ள என்ன இருக்கும் என ஆரும் கேட்டிடப்பூடா:).

    பதிலளிநீக்கு
  11. அருமையான கவிதை.
    பகிர்ந்தமைக்கு நன்றி.
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு