மனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஆகஸ்ட் 17

குரங்கு கூட்டம்

ஆடை அழகுதான்
மனம்தான் அழுக்கு
ஆடை அழுக்குதான்
மனம் வெகு அழகு

            மனிதர்கள் உடலை அழகுபடுத்தும் விதத்தில் பாதிகூட மனம் அழகுபடுத்துவதற்கு நேரம் செலவிடுவதில்லை. இப்போதெல்லாம் விலை உயர்ந்த பொருட்களுக்குத் தரும் மதிப்பில் பாதிகூட மனிதர்களுக்கு தருவதில்லை.



வளைகின்றது
நெழிகின்றது
சுழன்றடிக்கிறது
புரட்டிப்போடுகிறது
குமுறுகிறது
குதூகலிக்கிறது
சொரணையின்றியிருக்கிறது
கவலைகொள்கிறது
ஏதோவொரு தருணத்தில் மனம்..!

செவ்வாய், செப்டம்பர் 27

மயக்கமா? குழப்பமா?

        'மனம் சொல்கிறபடியெல்லாம் கேட்டால் மனிதன் மகிழ்ச்சியோடு வாழலாம்!'
         இது ஒரு மனிதனின் நம்பிக்கை. மனம் சொல்லியது... 'அழகான வீடு ஒன்றைக் கட்டிக் கொள்!'
          அந்த மனிதன் அழகான வீட்டைக் கட்டிக் கொண்டான்.இயற்கை எழில் கொஞ்சும் மலையடிவாரம். அதை ஒட்டினாற் போல மிகப் பெரிய ஏரி. சுற்றிலும் பசுமையான மரங்கள். திரும்பிய இடமெல்லாம் வண்ணவண்ணப் பூக்கள். இவற்றின் நடுவே அந்த வீட்டை உருவாக்கினான்.