செவ்வாய், செப்டம்பர் 27

இராஜை நந்தனின் கவிதைகள்...


தூரம் எனினும் 
தொட்டுவிட முடிகிறது
குளத்தில் நிலா!
----------------------------------------

மயக்கமா? குழப்பமா?

        'மனம் சொல்கிறபடியெல்லாம் கேட்டால் மனிதன் மகிழ்ச்சியோடு வாழலாம்!'
         இது ஒரு மனிதனின் நம்பிக்கை. மனம் சொல்லியது... 'அழகான வீடு ஒன்றைக் கட்டிக் கொள்!'
          அந்த மனிதன் அழகான வீட்டைக் கட்டிக் கொண்டான்.இயற்கை எழில் கொஞ்சும் மலையடிவாரம். அதை ஒட்டினாற் போல மிகப் பெரிய ஏரி. சுற்றிலும் பசுமையான மரங்கள். திரும்பிய இடமெல்லாம் வண்ணவண்ணப் பூக்கள். இவற்றின் நடுவே அந்த வீட்டை உருவாக்கினான்.